அரசு ஊழியர்களுக்கு வந்த ஆர்டர்.. இப்ப மின்துறைக்கும் அறிவிப்பு.. இனி தப்ப முடியாது.. திடீர் உத்தரவு
சென்னை: தமிழக மின்வாரியம் ஒரு முக்கிய நடவடிக்கையை எடுக்க போகிறது. இதுகுறித்த அறிவிப்பும் விரைவில் வரப்போவதாக தெரிகிறது.
சமீபத்தில், என்எம்சி எனப்படும் தேசிய மருத்துவ கவுன்சில் புது அதிரடி ஒன்றை பிறப்பித்திருந்தது.. அதன்படி, நோயாளிகளின் விவரங்கள் அடங்கிய மருத்துவப் பதிவேட்டை அனைவரும் பராமரிக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

அத்துடன், மருத்துவ கல்லூரிகளில் ஆதாருடன் கூடிய பயோமெட்ரிக் வருகைப் பதிவு, மருத்துவ பதிவேடு மற்றும் சிசிடிவி கேமரா பொருத்தும் நடவடிக்கைகளில் சந்தேகங்கள், உதவிகளுக்கு பிரத்யேக இமெயில் முகவரிகளையும் ஆணையம் வெளியிட்டிருந்தது.
பயோமெட்டிக்: ஆதார் பயோமெட்ரிக் வருகைப்பதிவுக்கு [email protected] என்ற இமெயில் முகவரியிலும், மருத்துவப் பதிவேடு நடைமுறைகளுக்கு [email protected] என்ற இமெயில் முகவரியிலும், சிசிடிவி கேமரா பொருத்துவதற்கு [email protected] என்ற இமெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் கேட்டுக் கொண்டிருந்தது.
அதேபோல, புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஒரு உத்தரவு போடப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 1 ம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை கட்டாயப்படுத்த வேண்டும் என்று புதுச்சேரி தலைமை செயலாளர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். ஊழியர்கள் சிலர் உரிய நேரத்திற்கு ஆபீசுக்கு வவருவதில்லையாம்... இப்படியெல்லாம் தொடர்ந்து குற்றசாட்டுகள் எழுந்துவந்தநிலையில்,இந்த கிடுக்கிப்பிடி உத்தரவு போடப்பட்டுள்ளது.
மின்துறை: இப்போது, இதே உத்தரவு மின்துறைக்கும் வந்துள்ளது. அதாவது, தமிழக மின் வாரியத்திற்கு, 2,811 பிரிவு அலுவலகங்கள், 744 உப கோட்டங்கள், 176 கோட்டங்கள், 44 மின் பகிர்மான வட்ட அலுவலகங்கள் உள்ளன.
அவற்றில் களப்பிரிவு, கணக்கீடு உள்ளிட்ட பிரிவுகளில் பணிபுரிவோரில், நிறைய பேர் சரியான நேரத்திற்கு அலுவலகம் வருவதில்லையாம்.. தொழிற்சங்கங்களை சேர்ந்த சிலரும் இப்படி வேலைக்கு வராமலே, வருகை பதிவு செய்துவிடுகிறார்களாம். அதனால்தான், ஆதார் எண் இணைப்பு அடிப்படையிலான விரல் ரேகை வருகை பதிவு முறையை அமல்படுத்த, மின் வாரியம் முடிவு செய்திருக்கிறது.
கைரேகை கருவிகள்: அதன்படி, கைரேகை கருவியில் பணியாளர்கள் விரல் ரேகையை பதிவு செய்ததும், "ஆதார் சர்வருக்கு" சென்று சரிபார்த்து, அதற்கு பிறகே வருகைப்பதிவேடு உறுதி செய்யப்படும்.
பணிக்கு வரும் நேரம், பணிமுடியும் நேரமும் உறுதி செய்யப்படும். எனவே, இனிமேல், ஒவ்வொரு அலுவலகத்திலும் கைரேகை கருவிகள் வைக்க, தொடர்பான விபரங்களை அனுப்புமாறு, பகிர்மான வட்டமேற்பார்வை பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டிருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications