அரசு அடையாள அட்டை இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும்… தேர்தல் ஆணையம் புது உத்தரவு
சென்னை: வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பூத் சிலிப் வைத்து வாக்களிக்க முடியாது என்று இந்திய தேர்தல் ஆணையம் திடீரென உத்தரவு பிறப்பித்துள்ளது.
இனி வாக்குச் சாவடி சீட்டு இருந்தாலும், வாக்காளர் அடையாள அட்டை ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற அரசு அடையாள அட்டைகளில் ஒன்றை வாக்களிக்கும் போது காண்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இதற்கு முன் வாக்காளர்கள் போட்டோ ஒட்டிய பூத் சிலிப்பை அடையாளமாக காட்டி வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால், இதை தவறாக பயன்படுத்தி வாக்களிப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு அதிகளவில் புகார்கள் மற்றும் மனுக்களாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, வாக்குச்சீட்டு இருந்தாலும் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற அரசு அடையாள அட்டைகளில் ஒன்று வாக்களிக்கும்போது காண்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.
[Read more: விமானி அபிநந்தனை வரவேற்க கோலாகல ஏற்பாடு... பஞ்சாப் முதல்வர் நேரில் சென்று வரவேற்கிறார்]
மேலும், வங்கி பாஸ்புக், ஆதார் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம் அளித்துள்ள ஸ்மார்ட் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் வேலை அட்டை, தொழிலாளர் துறை வழங்கிய சுகாதார காப்பீட்டு அட்டை, ஓய்வூதிய ஆவணம், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களை காட்டியும் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications