விமானி அபிநந்தனை வரவேற்க கோலாகல ஏற்பாடு… பஞ்சாப் முதல்வர் நேரில் சென்று வரவேற்கிறார்
Recommended Video

பஞ்சாப்: முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் சிங் வாகா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய விமானி அபிநந்தனை வரவேற்க அனுமதி அளிக்குமாறு பிரதமர் மோடியிடம் பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் சிங் அனுமதி கோரியிருந்த நிலையில், வாகா எல்லை செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விமானி அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைப்பதால் வாகா எல்லையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரம் இந்திய விமானி அபிநந்தனுக்கு பாகிஸ்தானில் உடல் பரிசோதனை நிறைவு பெற்றுள்ளது. இன்று பிற்பகல் 12 மணி அளவில் வாகா எல்லையில் விங் கமாண்டர் அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என கூறப்படுகிறது.

அபிநந்தன் முழு ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வாகா வழியாக இந்தியா வரும் அபிநந்தனை வரவேற்க மேள, தாளங்களுடன் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.
இதற்கிடையே, இம்ரான் கானுடன் நான் கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன், அவர் சமாதானத்துக்கான முயற்சிகளை மேற்கொள்கிறார். இந்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து சொல்லிக்கொண்டிருந்த போது கூட முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் தீவிரவாதத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன் தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்றார்.
[Read more: உலகையே திரும்பி பார்க்க வைத்த பாகிஸ்தான்.. 48 மணி நேரத்தில் ஒரு நாட்டின் முகத்தை மாற்றிய தமிழர்!]
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும் என்று முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் வன்மையாக தொடர்ந்து கண்டித்து வருகிறார். இந்தநிலையில், அபிநந்தனை வரவேற்க கோலாகலமான ஏற்பாடுகள் நடந்து கொண்டுள்ளது. இதில், மத்திய அரசின் முக்கிய பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள் என்ற தகவல் கிடைத்திருக்கிறது.
-
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! முகத்திலேயே விழுந்த அடி.. கப்பலை கூட அனுமதிக்காத ஈரான்! இதெல்லாம் தேவை தானா -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்!












Click it and Unblock the Notifications