Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வலையில் மாட்டிய ஆளுநர்.. ‛சைன்’ போட்டுட்டு தான் டெல்லி போகனும்! ஆங்கிலத்தில் அலறவிட்ட துரைமுருகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக ஆளுநர் இப்போது வலையில் மாட்டிவிட்டார். அவர் 10 மசோதாவுக்கும் கையெழுத்து போட்டுவிட்டு தான் டெல்லிக்கு போகனும் என சட்டசபையில் அமைச்சர் துரை முருகன் ஆங்கிலம் கலந்த தமிழில் பேசி கவனம் ஈர்த்தார்.

தமிழக அரசு ஒப்புதலுக்காக அனுப்பிய 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்என் ரவி திருப்பி அனுப்பி உள்ளார். இந்நிலையில் இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று நடந்து வருகிறது.

Governor is now trapped, he would go to Delhi after signing all the, Minister Durai Murugan says in English

சபாநாயகர் அப்பாவு தலைமையில் இந்த கூட்டம் தொடங்கியது. முதலில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு ஆளுநர் ஆர்என் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான தனித்தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்தார்.

இதையடுத்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன் உள்பட பிற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக பேசி 10 மசோதாக்களை மறுஆய்வு செய்யும் முதல்வர் ஸ்டாலினின் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசி வந்தனர். பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதன்பிறகு சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

அப்போது, அவர், ‛‛ஆளுநர் இந்த 10 சட்ட முன்வடிவுகளையும் நிராகரிக்கவில்லை, நிறுத்தி வைத்துள்ளதாக நான் கருதுகிறேன். ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்பு ஏன் இந்த சட்டசபை கூட்டத்தை கூட்ட வேண்டும்?'' என கேள்வி எழுப்பினார். இதையடுத்து சபை முன்னவரும், அமைச்சருமான துரை முருகன் எழுந்து பதிலளித்தார்.

Governor is now trapped, he would go to Delhi after signing all the, Minister Durai Murugan says in English

அப்போது அவர், ‛‛நாளைக்கு (அதாவது நாளை மறுநாள்)வழக்கு விசாரணைக்கு வரும் போது மசோதாக்களை திருப்பி அனுப்பி விட்டேன். என்னிடம் நிலுவையில் இல்லை என ஆளுநர் கூறுவார். அதனால்தான், இன்றே இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ராஜ் பவனுக்கு (கவர்னர் மாளிகை) அனுப்பி வைக்க உள்ளோம். நாளை இது ராஜ்பவனில் இருக்கும்'' என்றார்.

முன்னதாக துரைமுருகன் சட்டப்புத்தகத்தை எடுத்து ஆங்கிலத்தில் உரையாற்றினார். அதாவது மசேதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பும் விதிகளை அவர் மேற்கோள் காட்டி சில வினாடிகள் படித்தார். அதன்பிறகு அதற்கான தமிழாக்கத்தையும் அவர் தெரிவித்தார். அதாவது ‛‛ஆளுநருக்கு அனுப்பும் மசோதாவை அவர் யோசனை கூறி திரும்ப அனுப்பினாலும், யோசனை கூறாமல் திருப்பி அனுப்பினாலும் அதனை ஏற்கலாம் இல்லாவிட்டால் ஏற்காமல் மீண்டும் அந்த மசோதாவை திருப்பி அனுப்ப முடியும். இப்படி அனுப்பும் மசோதாவுக்கு அவர் கட்டாயம் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும். ஆக இப்போது வலையில் மாட்டிவிட்டார். நாளைக்கு வழக்கு வருவதற்கு முன்பு இந்த மசோதாக்கள் ராஜ்பவனில் இருக்கும். அதற்கு கையெழுத்து போட்டுவிட்டு தான் டெல்லிக்கு போகனும்'' என பேசினார். இதை கேட்டவுடன் திமுக எம்எல்ஏக்கள் கை தட்டி வரவேற்றனர். ******

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+