சாலையில் மயங்கி விழுந்த மூதாட்டி! பதறிதுடித்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்த ஆளுநர் தமிழிசை!
சென்னை: சென்னை சாலிகிராமத்தில் சாலையில் மயங்கி விழுந்த மூதாட்டி ஒருவருக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முதலுதவி சிகிச்சை வழங்கி மருத்துவமனை அனுப்பி வைத்தார்.
பொங்கல் நன்னாளில் மருத்துவ சேவையாற்றி மூதாட்டியின் உயிரை காப்பாற்றியதற்காக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
தமிழிசை சவுந்தரராஜன் மருத்துவராக இருந்து பிறகு அரசியலுக்குள் நுழைந்தவர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

தெலுங்கானா ஆளுநர்
தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தனது குடும்பத்தினருடன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று பொங்கல் கொண்டாடினார். இதையடுத்து அவரை சந்தித்து வாழ்த்துப் பெறுவதற்காக ஏராளமானோர் திரண்டதால் அவர்களை சந்தித்து கொண்டிருந்த வேளையில், சாலையில் இருசக்கர வாகனத்திலிருந்து சித்ரா என்ற மூதாட்டி மயங்கி விழுந்த தகவலை அறிந்திருக்கிறார்.

மருத்துவமனை
இதையடுத்து சற்றும் தாமதிக்காமல் பதறித்துடித்து சென்று அந்த சித்ராவை பரிசோதித்து பார்த்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், உடனடியாக 108 ஆம்புலன்ஸை வரவழைத்து அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன் அந்த மூதாட்டிக்கு தண்ணீர் கொடுத்த தமிழிசை, சித்ரா அம்மா எப்படி இருக்கீங்க என வாஞ்சையுடன் அந்த மூதாட்டியிடம் நலம் விசாரித்தார்.

மனிதநேயம்
இதனிடையே வெறுமனே 108 ஆம்புலன்ஸை வரவழைத்து அதில் ஏற்றி மட்டும் விடாமல், பிரபல தனியார் மருத்துவமனையை தொடர்பு கொண்டு பேசி உரிய சிகிச்சை அளிக்கவும் கேட்டுக்கொண்டார். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் இந்த மனிதநேயமிக்க செயல் அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கிறது. இந்தக் காலத்தில் ஒரு வார்டு கவுன்சிலரே பகட்டாகவும், பந்தாவாகவும் சுற்றி வரும் நிலையில், ஆளுநர் தமிழிசையின் எளிமையும், மனிதநேயமும் அவருக்கு சிறப்பு சேர்த்துக் கொடுத்திருக்கிறது.

மருத்துவர்
அரசியலுக்குள் நுழைவதற்கு முன்னர் தமிழிசை சவுந்தரராஜன் மருத்துவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தஞ்சை, சென்னை என பல ஊர்களில் அவர் மருத்துவராக சேவையாற்றி இருக்கிறார். ஆளுநர் பணிக்கு மத்தியிலும் அவ்வப்போது உடல்நலம் சார்ந்த பதிவுகளையும் மக்கள் நலன் கருதி அவர் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications