நைட்டு கடை திறந்தா பொருளாதாரம் பிச்சுக்கும்னு ஐடியா கொடுத்தது யாரு.. வாட்ஸ் ஆப்பில் கலகல!
Recommended Video
சென்னை: 24 மணி நேரமும் வியாபாரம் செய்ய அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இது கலவையான கருத்துக்களைக் கிளப்பியுள்ளது.
இந்த நிலையில் வாட்ஸ் ஆப்பில் ஒரு செய்தி வலம் வருகிறது. இப்படி விடிய விடிய கடை திறந்து வைக்கலாம் என்று யார் ஐடியா கொடுத்தது என்று கேட்டு ஜாலியாக பல கேள்விகளையும் கேட்டுள்ளனர். அதை நீங்களும் படிங்க..
நைட்டு கடை திறந்தா பொருளாதாரத்துல தமிழ்நாடு பிச்சுக்கும்ன்னு யாரு ஐடியா கொடுத்ததுன்னு தெரியல, சொன்ன பய இதையெல்லாம் சொன்னானான்னும் தெரியல.

நைட்டு கடைய அடைக்க சொல்றதே, மொள்ளான், முடிச்சவிக்கி நடமாட்டம் தனியா தெரிஞ்சுக்கலாம்ன்னுதான். இந்த சட்டத்துனால, மக்கள் நடமாட்டமும் இருக்கும், அப்புறம் நைட்டு நடமாடறவன் பொதுமக்களா இல்ல திருட்டு கபோதியான்னு எவனுக்கு தெரியும்.
நைட் பீட் பாக்கற போலீசுக்கு தெரியும், பதினோரு மணிக்கு மேல டாஸ்மாக் கூட்டம் முடிஞ்சது, ஒன்ரைக்கு மேல சினிமா கூட்டமும் முடிஞ்சது அதுக்கு மேல யாரு வந்தாலும் போலீஸ் சந்தேகப்பட்டு விசாரிக்கலாம், இந்த நேரத்துல இங்க என்ன வேலைன்னு ?
இனி விசாரிக்க முடியாது..
"எங்கம்மா கால் கிலோ பருப்பு வாங்கியாரச் சொன்னுச்சு"
"தூக்கம் வரல, சும்மா டீ சாப்பிட்டு பேசிட்டு இருக்கலாம்ன்னு வந்தோம்"
"வீட்டுல அருவா, கத்தியெல்லாம் இல்ல, காலைல சமைக்க செய்ய வாங்கிட்டு போறேன் சார்"
இதுதான் பதிலா இருக்கும், போலீஸ் கேட்டுதான் ஆகணும், இல்லன்னா செல்போன்ல கேமிராவ ஆன் பண்ணுவான் தேவையா ?
இனி இந்த உத்திரவால் பொருளாதாரம் வளர்ச்சி அடைகிறதோ இல்லையோ, குற்றங்கள் கண்டிப்பாக வளர்ச்சி அடையும், காவல்துறை எப்.ஐ.ஆர் வேணும்னா போடும் மற்றபடி எதுவும் செய்ய முடியாது.. காரணம் மக்கள் தொகைக்கு ஏற்ற அளவில் காவல்துறையினர் இல்லை. ஏழரை கோடி பேரின் பாதுகாப்புக்கு காவல்துறையினர் வெறும் ஒரு லட்சம் பேர்தான்!
நியாயமான கேள்விகள் நிறையவே இருக்கு.. பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் அரசு போதிய அளவில் நடவடிக்கை எடுக்கும் என நம்புவோம்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
வன்னி அரசு வந்ததும் வராததுமா செய்த வேலை.. அரசு அதிகாரிகள் பங்கேற்ற தாட்கோ கூட்டத்தில் என்ன நடந்தது -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்












Click it and Unblock the Notifications