அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிறுத்தம்... விருப்பமே இல்லாமல் ஒப்புதல் தந்த முதல்வர்
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைக்கப்படுவதாக நேற்று முன் தினம் அறிவிப்பு வெளியாகிய நிலையில், இதற்கு விருப்பமே இல்லாமல் தான் முதலமைச்சர் ஒப்புதல் கொடுத்துள்ளார்.
காரணம் பொதுமுடக்கம் உள்ள இந்த பேரிடர் காலத்தில் கூட காவல்துறையினர், மருத்துவத்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், வருவாய்த் துறையினர், உள்ளாட்சித் துறை மற்றும் கூட்டுறவுத் துறையினர் மக்கள் பணியாற்றி வருவதால், இந்த அறிவிப்பு அவர்களுக்கு சோர்வை தரும் என முதல்வர் நினைத்திருக்கிறார். இதனால் அரசு ஊழியர்கள் ஊதிய விவகாரத்தில் கை வைக்க வேண்டாம் என்றுதான் சொல்லியிருக்கிறார்.

ஆனால் நிதி ஆதாரத்தை பெருக்க வேறுவழியில்லை என்றும், மத்திய அரசே அகவிலைப்படி உயர்வை நிறுத்திவைத்திருக்கும் போது நாமும் அதை பின்பற்றினால் தவறில்லை எனவும் அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை இயல்பாகவே அதிகாரிகளின் ஆலோசனைகளை மீறி நடக்காதவர். நிதி சிக்கன நடவடிக்கையாக வேறு வழியின்றி அரைமனதுடன் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைப்பு என்ற அரசாணையை வெளியிட்டுள்ளார்.
இதனிடையே தமிழக அரசின் இந்த நடவடிக்கையை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் நேற்று அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் இறுக்கம் செய்து அவர்களை இன்னலுக்கு ஆளாக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டிருந்தார். ஸ்டாலினின் இந்த ஆதரவு குரல் அரசு ஊழியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதுவும் அரசு தரப்புக்கு நெருடலை ஏற்படுத்தியுள்ளது.
இக்கட்டான இந்த பேரிடரில் உயிரை பணயம் வைத்து மக்கள் பணிகளில் ஈடுபட்டு வரும் தங்களுக்கு மேலும் அயர்வும், ஆர்வமின்மையும் ஏற்படும் வகையில் தமிழக அரசின் அறிவிப்பு அமைந்துள்ளதாக வேதனை தெரிவிக்கிறார்கள் அரசு ஊழியர்கள்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications