Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

+1 மாணவர்களுக்கு குட் நியூஸ்! இந்த கேள்வி நம்பரை போட்டிருந்தாலே கருணை மதிப்பெண்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 11 ஆம் வகுப்பு கணினி அறிவியல் (Computer Science) தேர்வில் 24வது கேள்வியை எழுதியிருந்தாலே 2 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. கேள்வி தவறாக கேட்கப்பட்டதால் கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வினை 7,518 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகள், 18, 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் 3316 தேர்வு மையங்களில் எழுதினர்.

Grace Marks Announced for Class 11 Computer Science Exam After Error in Question Paper

அதேபோல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 5 ஆம் தேதி தொடங்கி மார்ச் 27 ஆம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வினை 7,557 பள்ளிகளில் படித்த 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 மாணவர்களும், 4 லட்சத்து 28 ஆயிரத்து 946 மாணவிகளும், 4755 தனித் தேர்வுகளும், 137 சிறைவாசிகள் என 8 லட்சத்து 23 ஆயிரத்து 261 பேர் 3316 தேர்வு மையங்களில் எழுதினர்.

இந்நிலையில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 83 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறுகின்றன. சுமார் 46,000 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது தொடர்பாக தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, 11 ஆம் வகுப்பு கணினி அறிவியல் தேர்வில் 24 கேள்வி தவறாக கேட்கப்பட்டதால் எந்த பதிலை எழுதி இருந்தாலும் 2 மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2 மார்க் கருணை மதிப்பெண்ணாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் மே 19 ஆம் தேதி 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.

முன்னதாக, 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் ஒரு மதிப்பெண் பிரிவில் நான்காவது கேள்விக்கு பதில் அளித்து இருந்தாலே ஒரு மதிப்பெண் கருணை மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமூக அறிவியல் பாடத் தேர்வில், ஒரு மதிப்பெண்ணுக்கான பொருத்தமான விடை தேர்வு செய்யும் வினாக்களில், நான்காம் வினாவுக்கு, தவறான விடை இடம் பெற்றிருந்தது. 4-வது கேள்வியில் 'கூற்று: ஜோதிபா பூலே ஆதரவற்றவர்களுக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான காப்பகங்களையும் திறந்தார். காரணம்: ஜோதிபா பூலே குழந்தை திருமணத்தை எதிர்த்தார். விதவைகள் மறுமணத்தை ஆதரித்தார்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கேள்வியில் 2 வாக்கியங்களுமே முரணாக இருப்பதாகவும், அதற்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.

விடை திருத்தும் பணி மேற்கொண்டுள்ள ஆசிரியர்கள், தேர்வுத்துறை கவனத்திற்கு எடுத்துச் சென்றனர். இதையடுத்து, அதனை பரிசீலித்து, அந்த வினாவுக்கு விடையளிக்க முயற்சித்த அனைவருக்கும், கருணை மதிப்பெண்ணாக ஒரு மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை அனுமதி அளித்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+