கிராம நத்தம்! 30 வருட புறம்போக்கு நிலத்திற்கு அரசின் பட்டா கிடைக்குமா? சின்ன தவறு தரும் பெரிய பாடம்
சென்னை: தமிழ்நாட்டில் பல தலைமுறைகளாக மக்கள் வசித்து வரும் பல இடங்கள் புறம்போக்கு நிலங்கள் என்றுதான் அழைக்கப்படுகின்றன. "30 வருஷமா இங்கேதான் குடியிருக்கோம், ஆனா இன்னும் பட்டா கிடைக்கலையே" என்ற ஆதங்கம் பல குடும்பங்களில் இன்னைக்கும் உண்டு. அரசு நிலத்தில் வசிப்பவர்கள் பட்டா பெற முடியுமா, அதற்கான நடைமுறைகள் என்ன என்பதை சாமானிய மக்களும் புரியும் வகையில் இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை எல்லா புறம்போக்கு நிலங்களும் ஒரே மாதிரி கிடையாது. அரசு நிலங்களை அதன் பயன்பாட்டைப் பொறுத்து ஆட்சேபனையற்றது மற்றும் ஆட்சேபனையுள்ளது என இரண்டு முக்கிய பிரிவுகளாக பிரிக்கிறது. உங்கள் நிலம் எந்த வகையை சார்ந்தது என்பதைப் பொறுத்தே உங்களுக்குப் பட்டா கிடைக்குமா என்பது முடிவாகும்.

எந்த நிலங்களுக்குப் பட்டா கிடைக்கும்?
கிராம நத்தம், தரிசு நிலங்கள், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத நஞ்சை, புஞ்சை என வகைப்படுத்தப்பட்ட அரசு நிலங்கள் ஆட்சேபனையற்றவை என்று சொல்வார்கள்.
அதாவது, அந்த நிலத்தை ஒரு தனிநபருக்கு கொடுப்பதால் மற்றவர்களுக்கோ அல்லது அரசு திட்டங்களுக்கோ எந்தப் பாதிப்பும் கிடையாது என்றால், அங்கு நீண்டகாலமாக வசிப்பவர்களுக்கு அரசு நிச்சயம் பட்டா வழங்கும். குறிப்பாக, 5 வருஷத்துக்கும் மேலாக ஒரு இடத்தில் குடியிருந்து, அதற்கான மின்சார கட்டணம், சொத்து வரி அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆதாரங்களை வைத்திருப்பவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் முறையாக விண்ணப்பிக்கலாம்.
யாரெல்லாம் பட்டா பெற முடியாது?
பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பல வருடங்களுக்கு முன்பேயே ஒதுக்கப்பட்ட நிலங்களை அரசு ஒருபோதும் தனிநபருக்கு பட்டாவாக வழங்காது.,, உதாரணத்திற்குகுளம், ஏரி, கால்வாய் போன்ற நீர்நிலைகள், பொது சாலைகள், மயானங்கள், மந்தைவெளி என்று சொல்லக்கூடிய மேய்ச்சல் நிலங்கள், கோவில் நிலங்கள் இவைகள் எல்லாமே ஆட்சேபனையுள்ள நிலங்கள் ஆகும்.
இந்த இடங்களில் நீங்கள் எத்தனை தலைமுறைகளாக வசித்தாலும் சட்டப்படி பட்டா பெற முடியாது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளும் நீர்நிலைகளை எக்காரணம் கொண்டும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதில் மிகத் தீவிரமாக உள்ளன. அதனால் இதுபோன்ற இடங்களில் குடியிருப்பவர்கள் பட்டா கேட்பது கடினமான விஷயம்.
பட்டா பெறுவதற்கான நடைமுறை என்ன?
எப்போதுமே பட்டா கோரி விண்ணப்பிக்கும்போது, வருவாய்த் துறை அதிகாரிகள் அந்த நிலத்தை நேரில் வந்து ஆய்வு செய்வார்கள். அந்த நிலம் உண்மையில் யாருக்காவது இடையூறாக இருக்கிறதா? அது நீர்நிலை புறம்போக்கா? என்பதைத் தெளிவாக சரிபார்ப்பார்கள்.
இதற்கு அந்த நிலத்தில் குடியிருப்பதற்கான சரியான ஆதாரங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில், அரசு அவ்வப்போது கொண்டு வரும் வரன்முறைப்படுத்துதல் திட்டத்தின் கீழ் உங்களுக்குப் பட்டா வழங்க பரிந்துரைக்கப்படும்.
மக்கள் கவனிக்க வேண்டியவை
புறம்போக்கு நிலத்தில் இருப்பவர்கள் முதலில் செய்ய வேண்டியது, அந்த நிலத்தின் சர்வே நம்பரை வைத்து தமிழ்நிலம் என்ற அதிகாரப்பூர்வமாக வெப்சைட் மூலமாகவோ அல்லது கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டோ அந்த நிலம் எந்த வகைப்பாட்டில் உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அரசு வழங்கியுள்ள இலவச பட்டா திட்டங்கள் அல்லது சிறப்பு முகாம்களைப் பயன்படுத்திக் கொள்வது சிறந்தது.
சட்டபூர்வமான ஆதாரங்களை சரியாகச் சமர்ப்பித்து, அரசு விதிகளை பின்பற்றினாலே தகுதியுள்ள நபர்களுக்கு அவர்கள் வசிக்கும் நிலம் சொந்தமாவது நிச்சயம் சாத்தியம்...!!
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications