சுத்தியலால் ஒரே அடி! சென்னையில் பாட்டியை கொலை செய்த பேரன்! இதுக்காகவா? காரணத்தால் அதிர்ந்த சென்னை!
சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையில், ஒரு லட்சம் பணத்திற்காக பாட்டியை, சுத்தி மற்றும் பிளேடால் தாக்கி கொடூரமாக கொலை செய்த பேரனை, போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த விசாலாட்சி என்பவர், கருமாரியம்மன் நகரில் வசித்து வருகிறார். வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் இவருக்கு, அமுதா என்ற மகள் உள்ளார்.
அமுதா, செங்குன்றத்தை அடுத்த காந்தி நகரில் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் உள்ளார்.

சென்னையில் அதிர்ச்சி
விசாலாட்சி, தனது மகள் அமுதாவுக்கு, செங்குன்றத்தில் வீடு கட்டுவதற்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, 4 லட்சம் ரூபாய் பணம் விசாலாட்சி கொடுத்துள்ளார். இதில் 3 லட்சத்தை, விசாலாட்சியிடம் மகள் அமுதா திருப்பிக் கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. மீதமுள்ள ஒரு லட்சம் ரூபாயை திரும்ப வழங்காமல் அமுதா காலம் கடத்தி வந்ததாக தெரிகிறது.

ஒரு லட்சம் பணம்
இந்நிலையில், நேற்று தாய் வீட்டுக்கு, தனது மகன் சதீஷ்டன் அமுதா வந்துள்ளார். அப்போது, விசாலாட்சி, தனது மகளிடம் மீதி தரவேண்டிய ஒரு லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதனால், தாய்க்கும், மகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் வாய்த்தகராறு முற்றியதால், தாயுடன் வந்த சதீஷ், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த சுத்தியலால் 'பாட்டி விசாலாட்சியை தாக்கி, பிளேடால் கிழித்தும் பலமாக தாக்கியுள்ளார்.

கொலை
இதனால் படுகாயமடைந்த விசாலாட்சி, ரத்த வெள்ளத்தில் வலி தாங்க முடியால் கூச்சலிட்டுள்ளார். பாட்டியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்த அவரை மீட்டு, உடனடியாக மருத்துமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எனினும், வழியிலேயே விசாலாட்சி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.கே. நகர் போலீசார், உயிரிழந்த விசாலாட்சியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெரும் பரபரப்பு
பின்னர், இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, பாட்டியை கொலை செய்த பேரன் சதீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு லட்சம் பணத்திற்காக, பாட்டியை பேரன் கொலை செய்த சம்பவம், சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்?












Click it and Unblock the Notifications