ஜியு போப், கால்டுவெல் படிக்காதவர்கள்! திராவிட மொழிகள் பற்றிய நூல் போலியானது.. ஆளுநர் ரவி பரபர பேச்சு
சென்னை: திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது என்றும், ஜி.யு. போப்பும் கால்டுவெல்லும் பள்ளிப்படிப்பை கூட முடிக்காதவர்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பரபரப்பாக பேசியுள்ளார்.
தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் நிலவுகிறது. தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவது.. சட்டமன்றத்தில் அரசின் உரையை படிக்க மறுப்பது என தொடர்ந்து அரசுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறார்.

அதேபோல், தமிழகத்தில் ஆளும் திமுகவையும் அதன் கொள்கைகளையும் நேரடியாக கடுமையாக சாடி வருகிறார். திராவிடம் என்பது காலாவதியானது என்ற விமர்சனங்கள் முதல் திமுக பற்றியும் அவ்வப்போது மிக காட்டமான கருத்துக்களை ஆளுநர் ஆர்.என். ரவி முன்வைப்பது வாடிக்கையாக உள்ளது. ஆளுநரின் இந்தக் கருத்துகளுக்கு ஆளும் திமுகவும் பதிலடி கொடுத்து வருகிறது.
கால்டுவெல், ஜியு போப் படிக்காதவர்கள்: இதனால், ஆளுநர் ரவி தமிழகத்தில் பொறுப்பேற்றது முதலே தொடர்ந்து உரசல்கள் நீடித்துக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், அய்யா வைகுண்டரின் 192 வது அவதார தினவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 'மகாவிஷ்ணுவின் அவதாரம் ஸ்ரீ வைகுண்ட சுவாமி அருளிய சனாதான வரலாறு' என்ற புத்தகத்தை வெளியிட்டு ஆளுநர் ரவி பேசினார்.
அப்போது பேசிய ஆளுநர் ரவி, திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல்கள் போலியானது என்றும் ஜி.யு. போப்பும் கால்டுவெல்லும் பள்ளிப்படிப்பை கூட முடிக்காதவர்கள் என்றும் பேசினார். இது தொடர்பாக ஆளுநர் ஆர் என் ரவி பேசியதாவது:- ஜியு போப், கால்டுவெல் போன்றவர்கள் பள்ளி படிப்பை கூட முடிக்காதவர்கள். மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதற்காகவே ஜியு போப், கால்டுவெல் இந்தியாவிற்கு வந்தனர்.
இயேசு, பைபிளை பிடிக்கும்: இயேசுவையும் பைபிளையும் எனக்கு பிடிக்கும். சனாதன தர்மத்தை காக்கவே 192 ஆண்டுகளுக்கு முன்பு அய்யா வைகுண்டர் தோன்றினார். சனாதன தர்மத்தின் கோட்பாட்டை கிழக்கிந்திய கம்பெனியினர் அழித்தனர். இந்தியாவை ஆட்சி செய்வதற்கு மதமாற்றம் என்ற கொள்கையை பிரிட்டிஷ் அரசு மேற்கொண்டது. சனாதன கோட்பாட்டின் அடிப்படையில் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள்.
சனாதனத்தை காக்கவே அய்யா தோன்றினார்: இந்த ஒற்றுமை இந்தியாவை அடிமைப்படுத்த சவாலாக இருந்தது. 1839 ஆம் ஆண்டு 90 ஆயிரம் மெட்ராஸ் மாகாண மக்கள் மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சனாதனத்தை காக்கவே 192 ஆண்டுகளுக்கு முன்பாக அய்யா வைகுண்டர் தோன்றினார். அய்யா வைகுண்டர் தோன்றிய சமூக காலகட்டம் சனாதன தர்மத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட காலகட்டம். சனாதன தர்மத்தை காக்கவே அய்யா வைகுண்டர் தோன்றினார். இவ்வாறு ஆளுநர் ரவி பேசினார்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications