வந்தது அறிவிப்பு.. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.. மாடுபிடிவீரர்கள் குஷி
ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.. அதன்படி, ஒரு காளையுடன் உரிமையாளர், ஒரு உதவியாளருக்கு மட்டுமே அடையாள அட்டையுடன் அனுமதி வழங்கப்படும், காளையுடன் வருபவர்களுக்கு கொரோனா டெஸ்ட் செய்து நெகட்டிவ் என சான்று பெற்றிருக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி, ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டு தோறும் நடைபெறும்.
கொரோனா தொற்று காரணமாக, தமிழகத்தில் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக பொது முடக்கம் அமலில் உள்ளது.. அதனால் வரும் ஜனவரியில் ஜல்லிக்கட்டு நடக்குமா என்ற சந்தேகமும் எழுந்தது..

கோரிக்கை
இதனிடையே, தமிழக அரசு முடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டி கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று ஜல்லிக்கட்டு கமிட்டிகளை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்தபடியே இருந்தனர்.

அறிவிப்பு
இந்நிலையில், 50 சதவித பார்வையாளர்கள், 50 சதவீத மாடுபிடி வீரர்கள் ஆகியோர் பங்கேற்கும் வகையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சான்றிதழ்
அதன்படி, ஒரு காளையுடன் உரிமையாளர், ஒரு உதவியாளருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காளையுடன் வருபவர்கள் கொரோனா டெஸ்ட் செய்து நெகட்டிவ் என்று சான்று பெற்றிருக்க வேண்டும். ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வட நாடு நிகழ்ச்சிகளில் அதிக பட்சமாக 300 பேர் வரை கலந்துகொள்ளலாம். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு 7 நாட்களுக்கு முன்பு பதிவு செய்து அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்... போட்டிகளை காண 50 சதவீதம் பார்வையாளர்களே அனுமதிக்கப்படுவர்.

மகிழ்ச்சி
அதேபோன்று போட்டியில் பங்கேற்கும் வீரர்களும் கொரோனா டெஸ்ட் செய்து நெகட்டிவ் என சான்று பெற்றிருக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியை மேற்பார்வை செய்யும் அலுவலர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் கொரோனா டெஸ்ட் கட்டாயம் செய்திருக்க வேண்டும். தமிழக அரசின் இந்த அறிவிப்பு ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்தும் ஏற்பாடுகளும் சுறுசுறுப்படைந்து உள்ளன!
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications