ஆக்ஸிஜன் தட்டுப்பாடு எதிரொலி... சிகிச்சைக்காக தனி விமானத்தில் சென்னைக்கு வந்த குஜராத் தொழிலதிபர்..!
சென்னை: குஜராத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு எதிரொலியாக, சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சிகிச்சைக்காக தனிவிமானத்தில் சென்னை அழைத்துவரப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை தீயாக பரவி வரும் நிலையில், குஜராத் மாநிலத்தில் அதன் பாதிப்புகள் ஏராளமாக உள்ளன. குஜராத் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.

இதுமட்டுமல்லாமல் ஆக்ஸிஜன் தட்டுப்பாடும் நாளுக்கு நாள் அங்கு அதிகரித்து வருகின்றன. இதனால் அம்மாநில அரசு மத்திய அரசின் தயவை நாடியுள்ளது.
இந்நிலையில் சூரத்தை சேர்ந்த முக்கிய தொழிலதிபர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி சூரத்தில் இருந்து தனிவிமானத்தில் அழைத்து வரப்பட்ட அந்த தொழிலதிபர், சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குஜராத் தொழிலதிபரை விமான நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு வசதியாக, தனியார் மருத்துவமனை தரப்பிலிருந்து சிறப்பு அனுமதி பெறப்பட்ட ஆம்புலன்ஸ் கேட் எண் 6 -ல் நிறுத்தப்பட்டு அங்கிருந்து தாமதமின்றி அழைத்துச்செல்லப்பட்டது.

விமான நிலைய ஆணையம் தரப்பிலும், தனியார் மருத்துவமனை தரப்பிலும் யார் அந்த தொழிலதிபர் என்பது குறித்த எந்த விவரத்தையும் வெளியிடாதது குறிப்பிடத்தக்கது. இதனிடையே வட இந்தியாவை சேர்ந்த வசதி படைத்தோர் பலர் சென்னை மற்றும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருவது அதிகரித்துள்ளது.
இந்தியாவின் மற்ற மாநிலங்களை காட்டிலும் தொலைநோக்குடன் தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பு திகழ்வதே பிறமாநிலத்தவர்களும் சிகிச்சைகாக இங்கு வருவதற்கு காரணமாகும்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications