எச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவி? சென்னையில் உறுதி கொடுத்த பிரதமர் மோடி.. பாஜக மேலிடம் எடுத்த முடிவு!
சென்னை: தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவி அளிக்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சென்னை வந்த பிரதமர் மோடி பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய மோடி, அப்போது எச்.ராஜாவை தனியாக அழைத்து உடல்நலம் குறித்து விசாரணை மேற்கொண்டதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கவுள்ளது. என்டிஏ கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இம்முறை காரைக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட விரும்பிய எச்.ராஜா உடல்நலம் சரியில்லாததால், கடைசி நேரத்தில் விலகுவதாக கட்சியினரிடம் கூறிவிட்டார்.

அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற எச்.ராஜா திடீரென மயங்கி விழுந்தார். இதன்பின் எச்.ராஜாவின் மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை, கட்சிகள் கடந்து முதல்வர் ஸ்டாலின் தொடங்கி பல்வேறு தரப்பினரும் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதனையடுத்து எச்.ராஜாவும் அரசியல் நடவடிக்கைகளை குறைத்து கொண்டார். இந்த நிலையில் புதுச்சேரியில் பிரச்சாரத்தை நிறைவு செய்துவிட்டு பிரதமர் மோடி சென்னை வந்தார். அப்போது பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி இருக்கிறார். அதேபோல் எச்.ராஜாவை நேரில் வரழைத்திருக்கிறார். மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதிக்கும் அப்பாய்ண்ட்மெண்ட் அளிக்கப்பட்டுள்ளது.
மொடக்குறிச்சி தொகுதியில் தனக்கு பதிலாக தனது மருமகளுக்கு சீட் கொடுத்ததற்காக பிரதமர் மோடிக்கு சரஸ்வதி நன்றி தெரிவித்துள்ளார். ஆனால் எச்.ராஜாவை தனியாக அழைத்து பேசிய மோடி, அவரின் உடல்நலம் குறித்து அக்கறையுடன் விசாரித்திருக்கிறார். அப்போது எச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவி அளிக்க உள்ள செய்தியையும் மோடி கூறி இருக்கிறார்.
சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்கு பின் இந்த செய்தி வெளியாகும் என்று மோடி உறுதி கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் எச்.ராஜா உற்சாகத்துடன் வந்திருக்கிறார். ஏற்கனவே எச்.ராஜாவுடன் கட்சி பணியாற்றிய இல.கணேசன், தமிழிசை செளந்தரராஜன், சிபி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆளுநர்களாக பணியாற்றிவிட்டனர். தற்போது எச்.ராஜாவுக்கு வாய்ப்பு அளிக்க பாஜக மேலிடம் முடிவு எடுத்திருக்கிறது.
-
மிட்நைட்டில் 4%வாக்குப் பதிவு? 'ஆந்திரா' பாணியில் தேர்தல்? எச்சரித்த நிர்மலா கணவர் -
“பாஜகவுக்கு ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துட்டேன்”.. கூலாக சொன்ன புதிய நீதிக்கட்சி தலைவர் AC சண்முகம் -
ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி! -
சர்ப்ரைஸ் வானதி சீனிவாசன்.. நோஸ் கட் அண்ணாமலை.. 2021 தேர்தல் பாஜக பிளாஷ்பேக் -
Annamalai: தமிழக சட்டசபை தேர்தல்.. ஒரு வழியாக பாஜகவின் "அந்த" பட்டியலில் இடம்பெற்ற அண்ணாமலை பெயர்! -
"அண்ணாமலை சட்டசபைக்குள் வரக்கூடாது என பிளான் போட்ட முக்கிய தலைகள்”.. போட்டு உடைத்த திருச்சி சூர்யா! -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
செருப்பு போடாதவர்.. 75 வயதில் முதல்முறை எம்எல்ஏ.. யார் இந்த நாகர்கோவில் பாஜக வேட்பாளர் காந்தி? -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
கோவை வடக்கில் வானதி சீனிவாசன் களம்: யார் இவர்? 2026 தேர்தலில் மீண்டும் கவனம் ஈர்க்கும் பாஜக முகம் -
திருநெல்வேலி 35 வருட அடையாளம் சார்.. யார் இந்த நயினார் நாகேந்திரன்.. சாத்தூரில் மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications