சபரிமலையில் நக்சல்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.... ஹெச்.ராஜா பகீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அய்யப்ப பக்தர்கள் இல்லாதவர்களை சபரிமலை கோவிலுக்குள் கேரள அரசு, அனுமதித்துள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சபரிமலை விவகாரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது என்றார்.

H.Raja condemnable To Kerala Chief Minister Pinarayi Vijayan on Sabarimala Issue

மேலும், இந்து விரோத, கம்யூனிச செயல்பாடு வண்மையாக கண்டிக்கத்தக்கது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும், சபரிமலையின் புனிதம் காக்கப்பட வேண்டும் என்று போராடுபவர்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் 10 முதல் 50 வயதுடைய பெண்களை அனுமதிக்கலாமா அல்லது வேண்டாமா என்பது தான்.

ஆனால், அய்யப்ப பக்தர்களாக இல்லாதவர்களையும், நக்சல்களையும் திருட்டுதனமாக போலீஸ் கூட்டி போகனும் என்று உச்சநீதிமன்றம் சொல்லி உள்ளதா? ஆகவே, நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டுள்ளது பினராயி விஜயன் அரசாங்கம் என்றார்.

முன்னதாக, சபரிமலையில் பெண்களை அனுமதித்ததை கண்டித்து, நேற்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அதே போல் தமிழகத்தின் சென்னை, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+