90% பொய் பித்தலாட்டம் வேலூரில் பல்லிளித்து விட்டது.. அடுத்து 100% தோல்விதான்.. எச். ராஜா சாபம்!
100% இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடையும் என எச்.ராஜ தெரிவித்துள்ளார்
Recommended Video
சென்னை: 90% பொய், பித்தலாட்டம் என வேலூரில் திமுக பல்லிளித்து விட்டது.. வரும் தேர்தலில் 100% தோல்வியைத் தழுவுவார்கள்" என்று எச். ராஜா ஆரூடம் தெரிவித்துள்ளார்.
விரைவில் இடைத்தேர்தல் வர உள்ளது. இதில், அதிமுகவும், திமுகவும் தீவிரம் காட்டி வருகின்றன. இதில், மக்களவைத் தேர்தலுக்கு அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த கருத்தினை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விமர்சித்திருந்தார். இது சம்பந்தமாகவும் ஒரு ட்வீட் போட்டார். அதில், "மக்களவைத் தேர்தலுக்கு அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வோம்: மு.க.ஸ்டாலின் - மீண்டும் பொய், மீண்டும் பித்தலாட்டம், மீண்டும் ஏமாற்று வேலை. பழக்கதோஷம் மாறாதல்லவா!" என்று காட்டமாக பதிவிட்டிருந்தார்.
இந்த பொய், பித்தலாட்டம் எல்லாம் வேலூரில் 90% பல்லிலித்து விட்டது. இடைத்தேர்தலில் 100% தோல்வியைத் தழுவுவார்கள் https://t.co/WJJZ2Tgc2X
— H Raja (@HRajaBJP) October 1, 2019
மக்களவைத் தேர்தலுக்கு அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வோம்: மு.க.ஸ்டாலின் - மீண்டும் பொய், மீண்டும் பித்தலாட்டம், மீண்டும் ஏமாற்று வேலை. பழக்கதோஷம் மாறாதல்லவா!
— Dr S RAMADOSS (@drramadoss) September 29, 2019
2 நாளைக்கு முன்பு டாக்டர் ராமதாஸ் போட்ட இந்த பதிவினை தன்னுடைய ட்வீட்டில் இப்போது இணைத்து எச்.ராஜா வழிமொழிந்துள்ளார். அதில், "இந்த பொய், பித்தலாட்டம் எல்லாம் வேலூரில் 90% பல்லிலித்து விட்டது. இடைத்தேர்தலில் 100% தோல்வியைத் தழுவுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
எச்.ராஜாவின் இந்த ட்வீட்டுக்கு, "நீங்கள் வந்து பிரச்சாரம் பண்ணுங்க தலைவரே... அதிமுக 80 சதவிகிதம் வாக்கு வாங்கி அமோகமா ஜெயிக்கும்" என்பது உட்பட பல கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.
நீங்கள் வந்து பிரச்சாரம் பண்ணுங்க தலைவரே... அதிமுக 80 சதவிகிதம் வாக்கு வாங்கி அமோகமா ஜெயிக்கும்..😂
— Ethirneechal P Guru (@Paramaguru911) October 1, 2019












Click it and Unblock the Notifications