கஞ்சி குடிக்கும் போது குல்லாய் போட்டுக்கலாம்.. ஆனால் காவித் துண்டு போட்டா தப்பா.. ஹெச் ராஜா
Recommended Video
சென்னை: கஞ்சி குடிக்கும் போது குல்லாய் போட்டுக்கலாம். ஆனால் காவித் துண்டு போட்டு ரவீந்திரநாத் பேசினால் அது தவறா. வெட்கம் என பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் சின்னமனூரில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் தேனி தொகுதி எம்பியான ரவீந்திரநாத் குமார் பங்கேற்றார். இந்த விழாவில் காவித்துண்டு அணிந்து பேசிய ரவீந்திரநாத், ", இதே சின்னமனூரில் கடந்த ஆண்டு நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நான்தான் தொடங்கி வைத்தேன்.

தற்போது, எம்பியாக இந்த ஊர்வலத்தைத் தொடங்கி வைத்துள்ளேன் கடந்த ஆண்டு நான் பேசுகையில் மோடியே மீண்டும் பிரதமராக வருவார் எனக் கூறினேன். அதேபோல அவரே பிரதமராக வந்து விட்டார். இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதற்கான முயற்சியில் பிரதமர் ஈடுபட்டு வருகிறார். நாம் அனைவரும் இணைந்து, வலிமையான புதிய பாரதத்தை உருவாக்க ஒற்றுமையாகப் பாடுபட வேண்டும். நாம் முதலில் இந்து. அதற்கு அப்புறம்தான் மற்றது" என்று பேசினார்.
கஞ்சி குடிக்கும் போது குல்லாய் போட்டுக்கலாம். ஆனால் காவித் துண்டு போட்டு திரு.ரவீந்திரநாத் பேசினால் அது தவறா. வெட்கம்.@ThanthiTV
— H Raja (@HRajaBJP) September 6, 2019
ரவீந்திரநாத் குமார் எம்பியின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் ரவீந்திரநாத் குமாரின் கருத்துக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கஞ்சி குடிக்கும் போது குல்லாய் போட்டுக்கலாம். ஆனால் காவித் துண்டு போட்டு ரவீந்திரநாத் பேசினால் அது தவறா. வெட்கம் என்று கூறியுள்ளார்.
முஸ்லிம்களுக்கு அரணாக இருப்போம், சிறுபான்மையினருக்கு அரணாக இருப்போம் என்றும் மாற்றுமத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் திமுக தீபாவளி,விநாயக சதுர்த்தி க்கு வாழ்த்துப் சொல்லாததை விவாதிக்கலாம் ஊடகங்கள்திரு.ரவீந்திரன் அவர்கள் நாம் இந்துக்கள் என்றதை விவாதிக்கிறது.இதுவும் இந்து விரோதமே
— H Raja (@HRajaBJP) September 6, 2019
முன்னதாக இன்னொரு பதிவில், முஸ்லிம்களுக்கு அரணாக இருப்போம், சிறுபான்மையினருக்கு அரணாக இருப்போம் என்றும் மாற்றுமத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் திமுக தீபாவளி,விநாயக சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாததை விவாதிக்கலாம். ஆனால் ஊடகங்கள் ரவீந்திரன் நாம் இந்துக்கள் என்றதை விவாதிக்கிறது. இதுவும் இந்து விரோதமே" என கூறியுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications