தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் மீண்டும் ஒத்தி வைப்பு.. முதல்வர் பரபரப்பு உத்தரவு
சென்னை: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நாளை தொடங்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகளை ஒத்தி வைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு கிறிஸ்துமஸ், புத்தாண்டுடன் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு டிசம்பர் 7, மற்றும் 8 தேதிகளில் அரையாண்டு தேர்வுகள் தொடங்கவிருந்தது.

இந்த நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்தது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் டிசம்பர் 4 ஆம் தேதி புயலானது வடதமிழகத்தை ஒட்டி ஆந்திராவுக்கு செல்லவிருந்ததால் அன்றைய தினம் மேற்கண்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் 5 அடிக்கு மேல் தேங்கியுள்ளது.
இதனால் இன்று வரை சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டிசம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் தொடங்கவிருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. அதாவது டிசம்பர் 11 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் இன்னும் பல இடங்களில் வெள்ளநீர் வடியவில்லை, மாணவர்களின் புத்தகங்கள், நோட்டுகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. இதனால் நாளை மாணவர்கள் தேர்வு எழுதுவதில் சிரமம் இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் அரையாண்டு தேர்வுகள் நடத்துவது குறித்து இன்றைய தினம் முடிவு செய்யப்பட்டது.
அதில் வரும் டிசம்பர் 13 ஆம் தேதி அரையாண்டு தேர்வுகள் நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இரு நாட்களில் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள், சீருடை, நோட்டு புத்தகங்களை வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அரசு பள்ளிகளை தூய்மை செய்ய ரூ 1.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள. அரையாண்டு தேர்வுக்கான புதிய கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications