தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் மீண்டும் ஒத்தி வைப்பு.. முதல்வர் பரபரப்பு உத்தரவு
சென்னை: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நாளை தொடங்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகளை ஒத்தி வைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு கிறிஸ்துமஸ், புத்தாண்டுடன் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு டிசம்பர் 7, மற்றும் 8 தேதிகளில் அரையாண்டு தேர்வுகள் தொடங்கவிருந்தது.

இந்த நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்தது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் டிசம்பர் 4 ஆம் தேதி புயலானது வடதமிழகத்தை ஒட்டி ஆந்திராவுக்கு செல்லவிருந்ததால் அன்றைய தினம் மேற்கண்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் 5 அடிக்கு மேல் தேங்கியுள்ளது.
இதனால் இன்று வரை சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டிசம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் தொடங்கவிருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. அதாவது டிசம்பர் 11 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் இன்னும் பல இடங்களில் வெள்ளநீர் வடியவில்லை, மாணவர்களின் புத்தகங்கள், நோட்டுகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. இதனால் நாளை மாணவர்கள் தேர்வு எழுதுவதில் சிரமம் இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் அரையாண்டு தேர்வுகள் நடத்துவது குறித்து இன்றைய தினம் முடிவு செய்யப்பட்டது.
அதில் வரும் டிசம்பர் 13 ஆம் தேதி அரையாண்டு தேர்வுகள் நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இரு நாட்களில் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள், சீருடை, நோட்டு புத்தகங்களை வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அரசு பள்ளிகளை தூய்மை செய்ய ரூ 1.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள. அரையாண்டு தேர்வுக்கான புதிய கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications