அரசு பஸ்ஸில் "150" வருது.. யாருக்கு பாருங்க.. போக்குவரத்து துறை மாஸ்.. தமிழ்நாட்டுக்கே மகிழ்ச்சி
சென்னை, மாநகர போக்குவரத்துக்கழகத்தின் கீழ் மட்டுமே, 629 வழித்தடங்களில் 3,233 மொத்தம் பஸ்கள் இயக்கப்படுகின்றன... இவைகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நிறைய மாற்றங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.
சென்னையில் மாநகர பஸ்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் குறித்து தொடர் கண்காணிப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சமீப காலமாகவே வலுத்து வந்தது.

சென்னை, மாநகர போக்குவரத்துக்கழகத்தின் கீழ் மட்டுமே, 629 வழித்தடங்களில் 3,233 மொத்தம் பஸ்கள் இயக்கப்படுகின்றன... இவைகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நிறைய மற்றங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.
ஸ்பெஷல் ஏற்பாடுகள்: குறிப்பாக பெண்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரின் நலன் கருதி ஜிபிஎஸ், சிசிடிவி கேமரா, எமர்ஜென்சி பட்டன், ஊன்றுகோல் வைப்பதற்கான வளையம் போன்றவை ஸ்பெஷலாக அமைக்கப்பட்டுள்ளன... ஆனால் இவையெல்லாம் முறையாக நடைமுறையில் உள்ளதா? என்று கண்காணிப்பதில்லையாம்..
ஒருசில மாநகர பேருந்துகளில், மாற்றுத்திறனாளிகளின் ஊன்றுகோல் வைப்பதற்காக இடவசதி உள்ளது என்றாலும், இது படிக்கட்டை ஒட்டி அமைந்திருக்கிறதாம். தடுப்பு எதுவுமே இல்லாததால், பஸ் வேகமாக சென்றாலும், ஊன்றுகோல் தவறி விழுந்துவிடும்.. அல்லது படியில் ஏறுவோருக்கு இடையூறு ஏற்பட்டுவிடும். அதனால், பயணிகள் கால் வைக்கும் இடத்தில் ஏதேனும் தடுப்புகள் இருந்தால், ஊன்றுகோலால் யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்காது என்று தமிழக அரசுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன.
மாற்றுத்திறனாளிகள்: இப்படிப்பட்ட சூழலில்தான், அமைச்சர் சிவசங்கர் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதில், 500 மின்சார பஸ்கள் உட்பட 2,271 பேருந்துகள் விரைவில் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதில், மாற்றுத்திறனாளிகளுக்காக 420 பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்..
இதற்கு பிறகு, மாற்றுதிறனாளிகளின் நலனுக்காக எளிதில் பயன்படுத்துவதற்குரிய அனைத்து வசதிகளுடன் கூடிய 552 புதிய தாழ் தள பேருந்துகளை ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன் கொள்முதல் செய்வதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியிருந்தார்.
அமைச்சர் சிவசங்கர்: இப்படிப்பட்ட சூழலில், அமைச்சர் சிவசங்கர் இன்னொரு மகிழ்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.. இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் உள்ளதாவது:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் பயணிகளின் பேருந்து சேவையை பூர்த்தி செய்யவும், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக எளிதில் பயன்படுத்துவதற்க்குரிய அனைத்து வசதிகளுடன் கூடிய 150 புதிய தாழ்தள பேருந்துகளை ரூ.135.48 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் கொள்முதல் செய்வதற்கு உற்பத்தியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
அறிவிப்பு: இந்த முயற்சிகளின் வாயிலாக தமிழ்நாடு அரசு போக்குரவரத்து கழகங்களின் மூலமாக வழங்கப்படும் பொதுப் போக்குவரத்து சேவைகள் தமிழகத்தை முதன்மையான நிலைக்கு உயர்ந்திடும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என்று அதில் தெரிவித்திருக்கிறார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications