சம்பளம் ஒரேயடியா ஏறுதே.. அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு தரப்போகும் சர்ப்ரைஸ்.. பணபலனை பாருங்க
சென்னை: விரைவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ் வரலாம் என்ற தகவல்தான் பரபரத்து வருகிறது.. என்ன காரணம்?
7வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, கடந்த 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது..

அறிவிப்பு: இதையடுத்து, மற்ற கொடுப்பனவுகளும் உயர்த்தப்படுமா? என ஊழியர்கள் பலரும் எதிர்பார்த்தபடியே காத்திருந்தனர்.. இந்நிலையில் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்த்தியதன் மூலம் விடுதி மற்றும் குழந்தைகளின் கல்வி உதவித்தொகை மானியங்கள் 25 சதவீதம் வரை திருத்தப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளனர்... அதுமட்டுமல்ல, அது தொடர்பான நிலுவை தொகையும் வழங்கப்படும் என்றும் கூறியிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
ஊதியக்குழு: அதேபோல, 8வது ஊதியக்குழு எப்போது அமைக்கப்படும் என்ற விவாதமும் அதிகமாகவே நடந்து வருகிறது.. எப்போதுமே 10 வருடத்துக்கு ஒருமுறை புதிய ஊதியக் குழு அமைக்கப்படும்.. அந்தவகையில், 7வது ஊதியக்குழு 2013ல் உருவாக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் 2016 முதல் அமல்படுத்தப்பட்டன...
இதில் ஃபிட்மென்ட் ஃபேக்டரை அடிப்படையாகவைத்து, 2.57 மடங்கு உயர்த்தி, சம்பளம் 14.29% ஆக உயர்ந்தது.. அதன் அடிப்படை சம்பளமும் ரூ.18000 ஆக எகிறியது.
சம்பளம்: இதன் அடிப்படையில், 2025-26ல் 8வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டால், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57ல் இருந்து 3.68 ஆக உயரும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.. அப்படியானால், சம்பளம் 44.44 சதவீதம் அதிகரிக்கும் என்றும், குறைந்தபட்ச சம்பளம் ரூ.26000 ஆக உயர்த்தப்படும் என்றும் தகவல்கள் கசிந்தபடியே உள்ளன.. இது நிறைவேறும்பட்சத்தில், ஜனவரி 1, 2026 முதல் செயல்படுத்தப்படும்.. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வமான எந்த அறிவிப்பும் அரசு தரப்பிலிருந்து வரவில்லை.
இந்நிலையில், இன்னொரு முக்கியமான தகவல் கசிந்து உள்ளது.. அதாவது, இந்திய ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் சார்பில் மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது.. இந்த கடிதத்தில் 8வது ஊதியக்குழுவை அமல்படுத்துவது குறித்த சில முக்கிய தேவைகள் மற்றும் அம்சங்கள் பற்றி வலியுறுத்தப்பட்டுள்ளதாம்.
ஊதியக்குழு: 8வது ஊதியக் குழுவில் எந்த திட்டமும் இல்லை என்று பாராளுமன்றத்திலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்றாலும், எனவே, தேர்தலுக்குப் பிறகு அமையப்போகும் புதிய அரசாங்கம், 8வது ஊதியக் குழுவை நிச்சயம் அமல்படுத்தும் என்கிறார்கள்.. அப்படி 8வது ஊதியக்குழு அமையும் பட்சத்தில், மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளத்தில் நல்ல மாற்றம் தென்படும் என்கிறார்கள்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications