18 மாத DA அரியர்.. ஜனவரியில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் ஏறுதா? ஓய்வூதியதாரர்களுக்கு வருது அறிவிப்பு
சென்னை: மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கான அறிவிப்பு வரும் ஜனவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளமும் ரூ. 34,500 வரை உயரும் என்று கணிக்கப்படுகிறது.
8வது சம்பள கமிஷன் அமைக்கப்போவது தொடர்பான பல்வேறு செய்திகள் வெளியாகியவண்ணம் உள்ளன.. இதில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் என்பதை தீர்மானிக்க ஃபிட்மென்ட் காரணி முக்கியமானது என்பதால், ஃபிட்மென்ட் குறித்த பேச்சும் அடிக்கடி அடிபடுகிறது.

அந்தவகையில், கடந்த 7வது ஊதியக்குழுவில் ஃபிட்மென்ட் காரணி 2.57 ஆக இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.. இதனால் தொழிலாளர்களுக்கான குறைந்த ஊதியம் 7,000 ரூபாயிலிருந்து 17,990 ரூபாயாக உயர்ந்தது. 8வது ஊதியக் குழு 2026ல் அமைக்கப்படும் என்று தெரிகிறது.. எனினும், அது எப்போது அமல்படுத்தப்படும் என்று இதுவரை உறுதியாக தெரியவில்லை.
தொழிலாளர்கள்: ஆனால், அரசாங்கத்தில் பணிபுரியும் ஊழியர்களும், ஓய்வு பெற்ற ஊழியர்களும் அதிக சம்பளம் பெற விரும்புகிறார்கள்.. காரணம், 10 வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே ஊதிய மாற்றங்கள் ஏற்படுவதால், அதிக ஊதியம் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தொழிலாளர்களிடம் ஏற்பட்டு வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில்தான், 8ஆவது ஊதியக் குழுவை அமைப்பதற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ. 34,500 வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் 2.86 மடங்கு உயரலாம்...
சம்பளம்: இப்போதைய 7வது ஊதியக் குழுவின்கீழ் 2.57 என்ற ஃபிட்மென்ட் காரணி பயன்படுத்தப்படுகிறது... இதன் காரணமாக குறைந்தபட்ச சம்பளம் 7,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. 8வது ஊதியக் குழுவில், ஃபிட்மென்ட் காரணியை 2.86 ஆக மாற்றலாம். அப்படி மாற்றும்பட்சத்தில் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ. 34,500 ஆக இருக்கும். இது 186 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, ஓய்வூதியதாரர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியமும் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது குறைந்தபட்ச ஓய்வூதியம் 9,000 ரூபாயாக உள்ள நிலையில், இது 2.86 என்ற ஃபிட்மென்ட் காரணியின்படி 25,740 ரூபாயாக அதிகரிக்கலாம்.. இவைகளுடன் அகவிலைப்படி உள்ளிட்ட மற்ற சலுகைகளுடன் ஓய்வூதியம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
புத்தாண்டில் குட்நியூஸ்?: புத்தாண்டில் இந்த நல்ல செய்தி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.. அல்லது பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் 8ஆவது ஊதியக் குழு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தெரிகிறது. எனினும், 8வது ஊதியக் குழு அமல் செய்வது சம்பந்தமாக இதுவரையில் அரசுத்தரப்பில் எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications