Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு மெகா அறிவிப்பு.. குட் நியூஸ் சொல்லும் தமிழ்நாடு அரசு.. இனிமே நிம்மதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு விரைவில் குட்நியூஸ் ஒன்று வரப்போகிறதாம்.. இது சம்பந்தமான நடவடிக்கைகளில் கூட்டுறவுத்துறை தீவிரமாக இறங்கி வருகிறது.

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன..

இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே ஏராளமான பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகின்றன..

பொங்கல்: அதேபோல, பொங்கல் பரிசு உள்ளிட்ட நிதியுதவிகளும் அரசின் மற்ற நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கார்டு மூலமாக வழங்கப்படுகின்றன. மற்றொரு புறம், ரேஷன் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், செல்போன் பதிவு எண்ணை மாற்றுதல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவித்தல் போன்றவைகள் குறித்தும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ள தமிழக அரசினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே, இன்னொரு தகவலும் வெளியிடப்பட்டது.. "ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்" அமலில் உள்ளது. அதாவது, இந்த திட்டத்தின் மூலம் மக்கள் நாட்டின் எங்கிருந்து வேண்டுமானாலும் ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும். நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை ஆவணங்களில் ஒன்றாக ரேஷன் கார்டு இருந்து வருகிறது.. மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருவதால் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாய்ண்ட் ஆஃப் சேல் சாதனங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த முடிவால் இனிமேல் ரேஷன் இடையில் குளறுபடியும் நடக்க வாய்ப்பு இருக்காது. அதனைப் போலவே இனிமேல் எந்த பயனர்களுக்கும் குறைவான ரேஷன் கிடைக்காது என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.. தமிழக அரசு ரேஷன் கடைகளின் மூலமாகதான் அனைத்துவித மக்களுக்கான நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. மேலும் கூட்டுறவு துறையின் வருமானத்தை அதிகரிக்கும் விதமாக ரேஷன் கடைகளில் அரசு வைபை குறைந்த செலவில் மக்களுக்கு அளிக்கும் திட்டம் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இ-சேவை மையங்கள்: இப்போதைக்கு, தமிழ்நாடு முழுவதும் 33,000-க்கும் அதிகமான நியாய விலைக் கடைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 24,106 கடைகள் முழு நேரமும், 9,708 கடைகள் பகுதி நேரமாகவும் செயல்பட்டு வரும்நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு இ சேவை வசதியை செயல்படுத்த, கூட்டுறவு துறை திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் கிராமப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகளில் இ-சேவை மையங்களில் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் தொடங்குவதற்கான ஆலோசனை நடந்து வருகிறது.

ரேஷன் கடைகள்: இந்த திட்டத்தின் மூலம் மக்கள் இ-சேவை மையங்களில் மேற்கொள்ளும் அனைத்துவித செயல்பாடுகளையும் ரேஷன் கடைகளிலேயே செய்து கொள்ளலாம். இதன் மூலம் அரசுக்கு கூடுதலான வருவாய் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதற்காக இந்தியா போஸ்ட் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக, இந்த திட்டம் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட உள்ளதாம்..

இதற்காக ரேஷன் கடைகளின் இருப்பிடம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. அதாவது பாஸ்போர்ட் சேவை, ஆன்லைன் வாயிலாக சேவை கட்டணம் செலுத்துவது, ஆதாரில் திருத்தம், நீக்குதல் உள்ளிட்ட சேவைகளையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 2 மாவட்டங்களில் கிடைக்கும் வரவேற்பின் அடிப்படையில் அடுத்த 6 மாதங்களுக்குள் தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்த கூட்டுறவு துறை திட்டமிட்டுள்ளது. குறிப்பாக கிராம புறங்களில் உள்ள நியாய விலைக் கடைகளில் முன்னுரிமை அடைப்படையில் இ சேவை தொடங்கப்படும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் அதிகாரிகள்.

Big news for ration card holders and ration shops at your doorstep, whats e service center
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+