வணிகவரித்துறை சூப்பர்.. லட்டு லட்டா சொல்றாரே அமைச்சர் மூர்த்தி.. வெறும் 5 மாதத்தில் ரூ.6,091 கோடி
சென்னை: தமிழகத்தில் கடந்த 5 மாதங்களில் வணிக வரித்துறையின் வருவாய் குறித்தும், ஜிஎஸ்டி வசூல் குறித்தும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். ஈட்டப்பட்டுள்ள வருவாயின் விவரங்களையும் அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
அரசுக்கு வருவாயை ஈட்டித்தருவதில் மிக முக்கிய பங்கினை வணிகவரித்துறை வகித்து வருகிறது.. எனவேதான்., வரி விதிப்பில் எளிய நடைமுறை, நிர்வாக சீர்திருத்தங்களுடன் கூடிய அடிப்படை கட்டமைப்பு வசதிகளை துறையில் மேம்படுத்துதல், அறிவியல் பூர்வமான பல தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மின்னாளுமைத் திட்டங்கள் உள்ளிட்டவற்றை செயல்படுத்தியும் வருகிறது.

வணிகர்கள்: அதேபோல, வணிகர்கள் பயன்பெறும் வகையில், சமாதான் திட்டம், குடும்ப நல உதவி, மருத்துவ உதவி, கல்வி உதவி, விளையாட்டு வீரர்களுக்கான உதவி, சிறு கடைகள் அமைத்திட நிதியுதவி, திருமண உதவி மற்றும் விபத்துக்கால உதவி என்று பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
எனவே, ஒவ்வொரு வருடமும், துறைரீதியாக ஈட்டப்படும் வருவாயை வணிக வரித்துறையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.. அந்தவகையில், கடந்த வருடத்தைவிட இந்த வருடம், அதிக வருவாயை வணிகவரித்துறை ஈட்டி வருகிறது...
வருவாய்: இந்த நிதியாண்டை பொறுத்தவரையில், தமிழக வணிக வரித் துறைக்கான வருவாய் இலக்கு ரூ. 1.42 லட்சம் கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது... இந்த நிதியாண்டிலேயே ரூ. 4 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைத்திருப்பதாக சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் மூர்த்தி கூறியிருந்தார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கான வருவாய் தொகையை அமைச்சர் மூர்த்தி தற்போது வெளியிட்டிருக்கிறார்.. சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிக வரி வளாக கூட்ட அரங்கில், கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கான பணித்திறன் ஆய்வுக்கூட்டம் வணிகவரி, பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
பாராட்டு சான்றிதழ்: வணிக வரி ஆணையர் டி.ஜகந்நாதன், இணை ஆணையர் துர்காமூர்த்தி மற்றும் வணிக வரித் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றிருந்த இந்த கூட்டத்தில், வணிகவரி ஆய்வு குழு பிரிவில் சிறப்பாக பணியாற்றி அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தந்தமைக்காக கூடுதல் ஆணையர் எஸ்.ஞானக்குமார் மற்றும் குழுவினருக்கு அமைச்சர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
பிறகு அமைச்சர் மூர்த்தி பேசும்போது,"வணிக வரித் துறையின் நடவடிக்கைகள், கண்காணிப்பு மற்றும் அலுவலர்களின் செயல்பாட்டால், வணிக வரித் துறையின் மொத்த வரி வருவாய் இந்த வருடத்தில், கடந்த ஆகஸ்ட் மாதம் வரை ரூ.55,807 கோடியாக உள்ளது. இது கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை வசூலிக்கப்பட்ட ரூ.49,716 கோடியுடன் ஒப்பிடுகையில், இந்த நிதி ஆண்டின் முதல் 5 மாதங்களில் ரூ.6,091 கோடி கூடுதலாகும்.
வசூல் தொகை: சரக்கு மற்றும் சேவை வரி வசூலை பொறுத்தவரையில், இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை ரூ.31,338 கோடியாக இருந்தது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை வசூலிக்கப்பட்ட ரூ.26,767 கோடியுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு வரி வருவாய் 17 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது" என்றார் அமைச்சர் மூர்த்தி.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications