ரூ 4 கோடி கடன் வாங்கி மோசடி.. சென்னை தொழிலதிபர் மீது ஹர்பஜன் சிங் புகார்
சென்னை: சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ரூ 4 கோடி கடன் வாங்கிவிட்டு மோசடி செய்ததாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் புகார் கொடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமாவார். சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூ 4 கோடியை கடனாக தன்னிடம் வாங்கியதாக ஹர்பஜன் சிங் புகார் அளித்துள்ளார்.
சென்னை மாநகர காவல் துறையிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளார். தொழிலதிபர் மற்றும் சிலர் தன்னை ஏமாற்றியதாகவும் ஹர்பஜன் தனது புகாரில் தெரிவித்துள்ளார். அந்த தொழிலதிபர் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

ஹர்பஜன் சிங்
தன்னிடம் மோசடி செய்தவர்களிடம் இருந்து பணத்தை திரும்ப பெற்றுத் தரும்படி ஹர்பஜன் சிங் சென்னை மாநகர காவல் துறையிடம் புகார் மனு அளித்திருந்தார். அந்த புகாரில் அவர் கூறுகையில் சென்னை உத்தண்டியைச் சேர்ந்த மகேஷ் என்ற தொழிலதிபர் நண்பர்கள் மூலம் எனக்கு அறிமுகம் ஆனார்.

4 கோடி ரூபாய்
தொழிலை விரிவுப்படுத்துவதற்காக 2015-ஆம் ஆண்டு என்னிடம் 4 கோடி ரூபாய் பணத்தை வாங்கினார். அதன் பின்னர் என்னால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி 25 லட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கினார்.

பவுன்ஸ்
ஆனால் அந்த காசோலை பவுன்ஸ் ஆனது என புகாரில் கூறியுள்ளார். இதையடுத்து மகேஷ் நேரில் ஆஜராக வேண்டும் என அவருக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். இதுகுறித்து மகேஷிடம் கேட்ட போது சென்னைக்கு அருகில் தாளம்பூரில் உள்ள எனது அசையா சொத்துகளை பிணையாக வைத்து ஹர்பஜனிடம் பணம் பெற்றேன்.

நிலுவைத் தொகை
இதற்காக திருப்போரூரில் உள்ள சார் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோம். ஹர்பஜன் சிங்கிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை முழுமையாகச் செலுத்திவிட்டேன் என தெரிவித்தார். இந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications