கிழிந்த நோட்டுகளை வங்கியில் மாற்ற முடியுமா? ரிசர்வ் வங்கியின் முக்கிய விதிகள் வெளியீடு
சென்னை: நம்மிடம் இருக்கும் ரூபாய் நோட்டுகள் தவறுதலாகக் கிழிந்துவிட்டாலோ அல்லது நனைந்து சிதைந்து போனாலோ, அதனைப் பயன்படுத்த முடியாது என்று பலரும் கவலைப்படுவதுண்டு.. ஆனால், இத்தகைய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மிகத் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.. அதை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
பழைய அல்லது கிழிந்த நோட்டுகளை மாற்ற வேண்டுமானால், நீங்கள் குறிப்பிட்ட அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது.. எந்தவொரு பொதுத்துறை வங்கி அல்லது தனியார் வங்கி கிளைகளிலும் சிதைந்த நோட்டுகளை கொடுத்து மாற்றிக்கொள்ளும் உரிமை பொதுமக்களுக்கு உண்டு..

கிழிந்த ரூபாய் நோட்டு
பொதுவாக ரூபாய் நோட்டுகள் அவற்றின் நிலைளை பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.. முதலாவது, அழுக்கான நோட்டுகள்.. இவை அதிகப்படியான பயன்பாட்டினால் அழுக்கடைந்தவை அல்லது எண்ணெய் பட்டு நிறம் மாறியவை..
2 துண்டுகளாகக் கிழிந்து, அந்த இரண்டு துண்டுகளும் ஒரே நோட்டை சேர்ந்ததாக இருந்து, அதில் உள்ள எண்கள் தெளிவாகத் தெரிந்தால் அவை அழுக்கான நோட்டுகளாகவே கருதப்படும்.. இத்தகைய நோட்டுகளை எந்தவொரு வங்கியிலும் கொடுத்து முழுத் தொகையையும் உடனடியாகப் பெற்றுக்கொள்ளலாம்..
செல்லாத சிதைந்த நோட்டுகள்
இரண்டாவது வகை, சிதைந்த நோட்டுகள்.. அதாவது நோட்டின் ஒரு பகுதி காணாமல் போனாலோ அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட துண்டுகளாகக் கிழிந்திருந்தாலோ அவை இந்த வகைக்குள் வரும்.. இத்தகைய நோட்டுகளை மாற்றும்போது சில முக்கிய அம்சங்கள் கவனிக்கப்படும்..
குறிப்பாக, நோட்டில் உள்ள வரிசை எண், ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையெழுத்து, அசோகா தூண் சின்னம் மற்றும் வாட்டர் மார்க் எனப்படும் நீர் நிழல் அடையாளம் ஆகியவை சிதையாமல் இருக்க வேண்டும்.. இந்த அடையாளங்கள் ஓரளவு சரியாக இருந்தால், அந்த நோட்டின் பரப்பளவைப் பொறுத்து உங்களுக்கு முழுத் தொகையோ அல்லது பாதித் தொகையோ வழங்கப்படும்..
உதாரணமாக, 2000 ரூபாய் நோட்டில் 88 சதுர சென்டிமீட்டர் அளவுக்கு மேல் சிதையாமல் இருந்தால் முழுத் தொகையும், 44 சதுர சென்டிமீட்டர் வரை இருந்தால் பாதித் தொகையும் கிடைக்கும்.. இதேபோல் 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளுக்கும் அவற்றின் அளவைப் பொறுத்து வங்கிகள் பணத்தைத் திருப்பி அளிக்கும்..
RBI விதிகள்
ஒரு நபர் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 20 நோட்டுகள் அல்லது 5,000 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளை வங்கியில் நேரடியாக மாற்றலாம்.. இதற்கு மேல் அதிகப்படியான நோட்டுகள் இருந்தால், வங்கிகள் அவற்றை ஒரு ரசீதுடன் பெற்றுக்கொண்டு, பின்னர் சில நாட்களுக்குப் பிறகு உங்கள் வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்தும்..
3வது வகை, மிக மோசமாக சிதைந்த நோட்டுகள்.. அதாவது தீயில் கருகியவை, ரசாயனம் பட்டு உருமாறியவை அல்லது பல துண்டுகளாக ஒட்டப்பட்ட நோட்டுகளை சாதாரண வங்கி கிளைகளில் மாற்ற முடியாது.. இத்தகைய நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் பிராந்திய அலுவலகங்களுக்கு மட்டுமே அனுப்ப வேண்டும்.. அங்குள்ள அதிகாரிகள் அந்த நோட்டுகளை ஆய்வு செய்து அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திய பிறகுதான் பணத்தைத் திருப்பித் தருவார்கள்..
கமிஷன் தேவையில்லை
வங்கிகள் உங்கள் நோட்டுகளை மாற்ற மறுத்தால், அது குறித்து ஆர்பிஐ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளிக்கலாம்.. புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட வங்கிக்கு 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது..
எனவே, கிழிந்த நோட்டுகளைக் கண்டு அஞ்சாமல், அருகிலுள்ள வங்கிக்குச் சென்று உரிய முறையில் மாற்றிப் பயன்பெறுங்கள்.. பழைய அல்லது கிழிந்த நோட்டுகளை யாரிடமும் கமிஷன் கொடுத்து மாற்ற வேண்டிய அவசியமில்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்..
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications