காசோலை மோசடி வழக்கு: மாஜி எம்.பி. அன்பரசுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை உறுதி- ஐகோர்ட்
சென்னை: காசோலை மோசடி வழக்கில் முன்னாள் எம்.பி. அன்பரசுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அத்துடன் தண்டனை உறுதி செய்யப்பட்ட அன்பரசு, மணி இருவரையும் சிறையில் அடைக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ்காந்தி கல்வி அறக்கட்டளைக்காக 2002-ல் பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ராவிடம் ரூ35 லட்சம் கடன் வாங்கியிருந்தார் அன்பரசு. இந்த விவகாரத்தில் அன்பரசு கொடுத்த காசோலைகள் பணம் இல்லாததால் திரும்பிவிட்டன.

இது தொடர்பாக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் முகுந்த்சந்த் போத்ரா வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2015-ம் ஆண்டு அன்பரசு, அவரது மனைவி கமலா, அறக்கட்டளை நிர்வாகி மணி ஆகியோருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
இத்தண்டனையை எதிர்த்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் முதலில் அன்பரசு மேல்முறையீடு செய்தார். ஆனால் கூடுதல் அமர்வு நீதிமன்றம் அன்பரசு உள்ளிட்டோருக்கான சிறை தண்டனையை உறுதி செய்தது.
இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்பரசு மேல்முறையீடு செய்தார். இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அன்பரசுவின் மனைவி காலமாகிவிட்டதால் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை கைவிடப்படுகிறது; அன்பரசு, மணி ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்படுகிறது. ஆகையால் 2 பேரையும் சிறையில் அடைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
-
கர்நாடக முதலமைச்சராக தேர்வாகும் டி.கே.சிவக்குமார்.. பெங்களூரில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications