மூவரசம்பட்டு ஏரியை மீட்க வேண்டும்.. கலெக்டருக்கு நோட்டீஸ்.. ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மூவரசம்பட்டு ஏரியை மீட்கக்கோரி கோரிய வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நங்கநல்லூரை சேர்ந்த ஏ.கே.இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

காஞ்சிபுரம் மாவட்டத்தின் நீராதாரமாக விளங்கிய ஏரிகளில் மூவரசம்பட்டு ஏரியும் ஒன்றாகும். சுமார் 2.33 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரி மடிப்பாக்கம், நங்கநல்லூர், பழவந்தாங்கல், புழுதிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக இருந்தது.
ஆனால், தற்போது இந்த ஏரி முற்றிலும் காணாமல் போன நிலையில் உள்ளது. பழைய பல்லாவரம், திரிசூலம், அம்மன் நகர், ஜெயலட்சுமி நகர் மற்றும் ஏரியை சுற்றியுள்ள பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் மூவரசம்பட்டு ஏரியில் விடப்படுகிறது. ஏரியின் கரைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன.

மேலும் ஏரியில் சட்ட விரோதமாக மணல் மற்றும் மண் அள்ளப்படுகிறது. இதனால, ஏரி முற்றிலும் அழிந்துவிடும் நிலையில் உள்ளது. எனவே, மூவரசம்பட்டு ஏரியை பாதுகாக்கவும், அதை பழைய நிலைக்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்க கோரி காஞ்சிபுரம் ஆட்சியர் பல்லாவரம் தாசில்தார் உள்ளிட்டோருக்கு கடந்த செப்டம்பர் 12ம் தேதி மனு அனுப்பினேன்.
எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் செல்வம் வாதிடுகையில் மூவரசம்பட்டு ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்குமாறும், சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை தடுக்குமாறும் அரசுக்கு உத்தரவிட வேண்டும்என்று வாதிட்டார்

இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் வரும் 21ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு காஞ்சிபுரம் ஆட்சியர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டனர்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications