அத்திவரதர் குள பராமரிப்பு.. அறிக்கை தாக்கல் செய்ய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவு
சென்னை: அத்திவரதர் குளம் தூர்வார கோரும் வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அனந்தசரஸ் குளத்தை மிகவும் மோசமான முறையில் பராமரிக்கின்றீர்கள் என்றும், தண்ணீரின் தரம் குறித்து திங்கட்கிழமை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விரிவாக அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
குளம் சுத்தம் செய்யும் பணியில் சி.ஐ.எஸ்.எப் வீரர்களை ஏன் உபயோகப்படுத்த கூடாது என கேள்வி எழுப்பி போர்கால அடிப்படையில் 50 முதல் 75 சி.ஐ.எஸ்.எப் வீரர்களை அனுப்பி பணிகளை முடிக்கலாம் என அறிவுறுத்தினார்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், குளத்தை நிரப்ப தேவையான 25 ஆயிரம் லிட்டர் தண்ணீரை நிரப்ப வேண்டும். பொற்றாமரை குளத்தில் உள்ள நீர் குடிக்க தகுதியானதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதனால், பொற்றாமரை குளத்தில் உள்ள தண்ணீரையும் விடலாம். ஆழ்துளை கிணறு மூலமாகவும் நீர் நிரப்பலாம் தெரிவிக்கப்பட்டது.
சிஐஎஸ்எஃப்-க்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த அறநிலையத்துறை இத்தனை நாட்களாக பணியை உள்ளூர் வாசிகளும், அறநிலையத்துறையும் செய்துள்ள நிலையில், கடைசி நேரத்தில் எப்படி சிஐஎஸ்எப்பை அனுமதிக்க முடியுமென தெரிவித்தார். இன்று காலையில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை சுத்தம் செய்யும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருவதாகவும், முழுமையாக விரைவில் பணி முடிவடையும் தெரிவித்தார். அவற்றை கண்காணிக்க மூன்று அப்சர்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதையேற்ற நீதிபதி சிஐஎஸ்எப் வேண்டாம் என தெரிவித்தார். பின்னர் அத்திவரதரை குளத்தில் இறக்கி அறையில் வைத்தவுடன், அந்த அறையில் மட்டும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை நிரப்பலாம் என உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கை ஆகஸ்ட் 19க்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளிக்கும் அறிக்கையை பொறுத்து எந்த தண்ணீரை குளத்தில் நிரப்பலாம் என உத்தரவு பிறப்பிப்பதாகவும் தெரிவித்தார்.
அப்போது கோவில் நிர்வாகம் தரப்பில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக அத்திவரதரை வைக்கும் அறையிலேயே நீர் ஊறி வருவதாக தெரிவித்ததையும் நீதிபதி குறித்து கொண்டார்.
-
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது












Click it and Unblock the Notifications