ஆமா.. இந்த கைலாசா நாட்டின் அதிபர் நித்யானந்தாவை எப்படி தொடர்பு கொள்வது?.. ஹைகோர்ட் நீதிபதி கிண்டல்
சென்னை: கைலாசா நாட்டின் அதிபர் நித்யானந்தாவை எவ்வாறு தொடர்பு கொள்வது என உயர்நீதிமன்ற நீதிபதி கிண்டலாக கேட்டார்.
Recommended Video

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் குறித்து தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார் நித்யானந்தா. அப்போது அவதூறு கருத்துகளை தெரிவித்ததையடுத்து அவர் மீது கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் அர்ஜுன் சம்பத் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நித்யானந்தா மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த 2011 ஆம் ஆண்டு கொடுத்த பேட்டிக்கு 3 ஆண்டுகளுக்கு பின்னர் தன் மீது அர்ஜுன் சம்பத் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும்.

விலக்கு
இந்த அவதூறு வழக்கிற்காகவே கோவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை கடந்த 2014-ஆம் ஆண்டு விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கோவை நீதிமன்றத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகி நித்யானந்தாவுக்கு விலக்கு அளித்திருந்தது.

ஆஜர்
பல வருடங்களாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு நீதிபதி எம் தண்டபாணி முன்பு கடந்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தா சார்பில் ஆஜராகி வந்த வழக்கறிஞர் தன்னுடைய வக்காலத்தை திரும்ப பெற்றுக் கொள்வதாக கூறினார். மற்றொரு வழக்கறிஞர் நித்யானந்தா சார்பில் ஆஜராக உள்ளதாக தெரிவித்திருந்தார்.

தனிநாடு
இதையடுத்து நீதிபதி தண்டபாணி கைலாசா என்ற தனிநாட்டை நித்யானந்தா உருவாக்கிவிட்டதாக கேள்விப்பட்டேன். ஒரு நாட்டின் அதிபரை எப்படி தொடர்பு கொள்வீர்கள் என கிண்டலாக கேட்டார். இந்த வழக்கில் நித்யானந்தா சார்பில் யாரும் ஆஜராகாததை அடுத்து நித்யானந்தாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

தேடப்படும் குற்றவாளி
பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த நித்யானந்தா வெளிநாட்டில் தலைமறைவாகிவிட்டார். எனினும் அவர் அவ்வப்போது லைவில் தோன்றி சத்சங்கம் செய்து வருகிறார். இந்த நிலையில் கைலாசா என்ற நாட்டை விலைக்கு வாங்கிவிட்டதாகவும் அங்கு குடியேற பாஸ்போர்ட்களையும் தயார் செய்துள்ளதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் நித்யானந்தா. இன்டர்போல் போலீஸார் இவரை தேடி வருவது குறிப்பிடத்தக்கது.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
இஸ்லாமிய மன்னர்களே பசுக்களை வெட்டியது இல்லை.. தீர்ப்பில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் சொன்னது என்ன? -
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து -
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
நாளை பக்ரீத்.. தமிழகத்தில் பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை.. ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில்












Click it and Unblock the Notifications