Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டாஸ்மாக் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு.. மே 31 வரை மட்டுமே அவகாசம்.. தமிழக அரசை கண்டித்த உயர்நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி வந்தது. ஆனால் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்துக்கு டாஸ்மாக் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் முழுமையாக அமல்படுத்த முடியவில்லை.. இதற்கு கண்டம் தெரிவித்த உயர்நீதிமன்றம், காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை வருகிற மே 31-ந்தேதிக்குள் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்றால், அதன் பின்னர் ஜூன் 1-ந்தேதி முதல் விற்கப்படும் ஒரு மதுபாட்டிலுக்கு ரூ.10 சுற்றுச்சூழல் பாதிப்பு இழப்பீடாக வசூலிக்க உத்தரவிடப்படும் என்று எச்சரித்தது.

ஊட்டி, கொடைக்கானல், மேகமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பலர் குடித்துவிட்டு பாட்டில்களை விட்டு எறிந்து செல்வதால் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாகவும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் அதிகரித்து. இதையடுத்து வனம், வனவிலங்கு, சுற்றுச்சூழல் உள்ளிட்டவை தொடர்பாக வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் போடப்பட்டது.

tasmac high court

இந்த வழக்குகளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிஷன் பெஞ்ச் விசாரித்து வருகிறது. வழக்குகளை விசாரிக்கும்போது, ஊட்டி, கொடைக்கானல், மேகமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்த அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படியே உடனே அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர், இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்த உத்தரவிட்டனர்.

இதுதொடர்பான வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை 28 மாவட்டங்களில் முழுமையாக அமல்படுத்தியுள்ளதாகவும், மாநிலம் முழுவதும் அமல்படுத்த அவகாசம் வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, "மதுபாட்டில்களுக்கு கியூஆர் கோடு பொருத்துவதற்கான டெண்டர் கோரப்பட்டிருக்கிறது. இந்த பணிகள் முடிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டால், காலி பாட்டில்களை திரும்பப்பெறும் விவகாரத்தில், டாஸ்மாக் பணியாளர்களுக்கு கூடுதல் சுமை இருக்காது. காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்துக்கு டாஸ்மாக் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை முழுமையாக அமல்படுத்த முடியவில்லை. இந்த திட்டத்தை அமல்படுத்த மே மாதம் வரை அவகாசம் வேண்டும்" என அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்ரவர்த்தி , "ஏற்கனவே ஒரு மாதம் அவகாசம் வழங்கியும் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த முடியவில்லை. இந்த திட்டத்துக்கு டாஸ்மாக் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அந்த பிரச்சினையை அரசு தீர்வு கண்டிருக்கவேண்டும். தினமும் 2 கோடி மதுபாட்டில்கள் விற்பனை ஆகிறது.

காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த இறுதியாக மே 31-ந்தேதி வரை அவகாசம் வழங்குகிறோம். அதற்குள் அமல்படுத்த வில்லை என்றால், அதன்பின் ஜூன் 1-ந்தேதி முதல் விற்கப்படும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் 10 ரூபாய் வீதம் சுற்றுச்சூழல் பாதிப்பு இழப்பீடாக டாஸ்மாக் நிர்வாகத்திடமிருந்து வசூலிக்க உத்தரவிடப்படும்" என்று எச்சரித்தனர். வழக்கு விசாரணையை ஜூன் 5-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+