குடிநீர் வழங்க கோரி போராடிய 32 பேர் மீதான வழக்கு ரத்து.. உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: குடிநீர் வழங்க கோரி போராடிய 32 பேர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை அடுத்த பழையகோட்டை கிராமத்தில், தொடர்ந்து பல நாட்கள் குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக 32 பேருக்கு எதிரான வழக்கு காங்கேயம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கு காரணமாக இரண்டாம் நிலை காவலர் பணி வாய்ப்பை இழந்த நித்தியானந்தம் என்பவர் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நீண்ட காலமாக குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்படுபவர்கள் தங்கள் எதிர்ப்பை அமைதியான போராட்டம் மூலமாகவே வெளிப்படுத்துவார்கள் என்றும், குடிநீர் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது குற்றவழக்குகள் பதிவு செய்வது என்பது அரசு இயந்திரத்தின் பக்குவத்தை வெளிப்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், குடிநீர் கேட்டு போராடியதற்காக 32 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கையும் ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications