"விஜய்க்கு உடல்நல பிரச்சனை? ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை" என தகவல்! அதான் பிரச்சாரம் ரத்தாம்!
சென்னை: தவெக தலைவர் விஜய்க்கு உடல்நல பாதிப்புகள் இருப்பதாகவும் அவரை சில வாரங்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. தவெக தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சி எப்படியும் ஆட்சியை பிடித்துவிடும் என அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் 233 தொகுதிகளிலும் (ஒரு தொகுதியில் தவெக வேட்பாளர் வேட்புமனு நிராகரிப்பு) விஜய் தனது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் வகையில் கடந்த 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை தவெக சார்பில் விஜய்க்கு பிரச்சார பயணம் திட்டமிடப்பட்டது.
கடந்த 30- ஆம் தேதி பெரம்பூரில் வேட்புமனுவை தாக்கல் செய்த விஜய் அங்கிருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். தாய் வீட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குவதாக அறிவித்திருந்தார்.
அங்கிருந்து மாலையில் ஆதவ் அர்ஜுனாவை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இருந்த நிலையில் வில்லிவாக்கத்தில் அவரது பிரச்சாரம் திடீரென ரத்து செய்யப்பட்டது. அது போல் ஏப்ரல் 6ஆம் தேதி மீண்டும் வில்லிவாக்கம், திநகரில் விஜய் பிரச்சாரம் செய்வதாக இருந்தது. அதையும் ரத்து செய்துவிட்டார்.
ஏப்ரல் 7 ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்தார். ஏப்ரல் 8ஆம் தேதி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
ஏப்ரல் 9ஆம் தேதி கடலூரில் பிரச்சாரம் என அறிவிக்கப்பட்டு அது 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று ஏப்ரல் 10-ஆம் தேதி காரைக்குடியில் விஜய் பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி அவர் பிரச்சாரம் செய்ய வந்ததால் ஒரு வார்த்தை கூட பேசாமல் வேட்பாளரை அழைத்து அவரது கையை உயர்த்தி காட்டி, அவருக்கு வாக்களிக்குமாறு செய்கையிலேயே பேசினார். அவரது பேச்சை கேட்க கொளுத்தும் வெயிலில் மணிக்கணக்கில் நின்றிருந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

நேற்றைய தினம் கடலூர் பிரச்சாரத்திற்காவது விஜய் குறித்த நேரத்திற்கு வந்து ஏதாவது பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்றைய பரப்புரையும் ரத்தாகியுள்ளது. விஜய் பிரச்சாரம் செய்கிறார் என்பதால் உதயநிதிக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது.
இன்று கன்னியாகுமரியில் நடக்கும் ரோடு ஷோ ரத்தாகுமா என சந்தேகம் எழுந்த நிலையில் விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு புறப்பட்டார். நாளை கும்மிடிப்பூண்டியில் நடக்கவிருந்த பிரச்சாரமும் ரத்தாகியுள்ளது.
இவ்வாறு தொடர்ந்து அவரது பிரச்சாரங்கள் ரத்தாவதால் தவெகவினர் அதிருப்தியில் இருக்கிறார்கள். தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் எதற்காக பிரச்சாரத்தை விஜய் ரத்து செய்கிறார் என்பது குறித்து விசாரித்த போது ஒரு தகவல் கிடைத்தது.
தவெக தலைவர் விஜய்க்கு உடல்நல பாதிப்புகள் இருப்பதாகவும் அவரை சில வாரங்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. எனினும் குமரியில் நடக்கும் ரோடு ஷோவில் விஜய் கலந்து கொண்டுள்ளார்.
-
திமுக-வா, ஆதவ் அர்ஜுனாவா? ஜனநாயகன் 'லீக் மாஸ்டர்' இவரா..வினோஜ் செல்வம் கிளப்பிய அந்த 1 பகீர் சந்தேகம் -
விஜய் அரசியல் என்ட்ரி.. சாதிய கட்சிகளுக்கு வீழ்ச்சியா? -
பிரச்சாரக் களத்துக்கு வரும் கமல்ஹாசன்.. விஜய் போட்டியிடும் 2 தொகுதிகளும் டார்கெட்! -
விஜய் உடன் மல்லுக்கட்டும் இனிகோ இருதயராஜ்.. திருச்சி கிழக்கு திமுக வேட்பாளரின் பலம், பலவீனம் என்ன? -
பிராமண எதிர்ப்பு காலாவதியாகிவிட்டதா? - தவெக பொருளாளர் சொல்வது சரியா? -
செந்தில் பாலாஜி போட்டியிடும் கோவை தெற்கில்.. தவெக வேட்பாளருக்கு புது சிக்கல்.. இதை கவனிச்சீங்களா.. போச்சே -
“ஜனநாயகன் லீக்.. அதிர்ச்சியளிக்கிறது!” அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்த ரஜினிகாந்த் -
பிரச்சார வாகனத்தில் இருந்து திடீரென சைக்கிளுக்கு தாவிய விஜய்.. காரைக்குடியில் சூழ்ந்த தவெகவினர்! -
"மிஸ்ராவை மிஸ் பண்ணிடாதீங்க"! வீல்சேரில் வந்த பொன்னம்பலமா இது! தவெகவுக்கு பிரச்சாரம் செய்றாரே! -
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
ஜனநாயகன் படம் லீக்கான விவகாரம்.. சிபிஎப்சிதான் காரணமா? தணிக்கை வாரியம் பரபர விளக்கம் -
சிவகங்கை அருகே விஜய்யின் பிரச்சாரத்தை வழிமறித்த பறக்கும் படையினர்! பரபரப்பு!












Click it and Unblock the Notifications