குறையாத காய்ச்சல் .. இரவோடு இரவாக அப்பல்லோவில் ‘அட்மிட்’ ஆன அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
சென்னை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவருக்கு மீண்டும் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதால் நேற்று இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி காய்ச்சல் காரணமாக, சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்தனர்.

உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அன்று மாலையே மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். எனினும் காய்ச்சல் மற்றும் உடல் சோா்வால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த 2 நாள்களாக ஓய்வில் இருந்து வந்தாா்.
மருத்துவர்களின் ஆலோசனைப்படி அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நிலையில், நேற்று காய்ச்சல் பாதிப்பு அதிகரித்ததால் ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோடு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
அங்கு மருத்துவர்கள் அவரது உடல்நிலையைப் பரிசோதனை செய்து தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர். தற்போது அமைச்சரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தென் சென்னை திமுக மாவட்ட செயலாளராக இருக்கும் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயராகச் சிறப்பாகச் செயல்பட்டவர். தற்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வரும் மா.சுப்பிரமணியன், தனது துறையின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனையின் தரத்தை பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்.
உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தினமும் உடற்பயிற்சி, நடைபயிற்சிகளை மேற்கொண்டு வருபவர் அமைச்சர் மா.சுப்பிரமணியன். நூற்றுக்கணக்கான மாரத்தான் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். உடலைப் பேணிக் காப்பதில் இளைஞர்களுக்கு ரோல் மாடலாக இருப்பவர் மா.சுப்பிரமணியன். அவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருக்கும் துரைமுருகன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வீட்டில் கீழே விழுந்ததன் காரணமாக காலில் காயம் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக அண்மையில் நடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்!












Click it and Unblock the Notifications