குறையாத காய்ச்சல் .. இரவோடு இரவாக அப்பல்லோவில் ‘அட்மிட்’ ஆன அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
சென்னை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவருக்கு மீண்டும் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதால் நேற்று இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி காய்ச்சல் காரணமாக, சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்தனர்.

உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அன்று மாலையே மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். எனினும் காய்ச்சல் மற்றும் உடல் சோா்வால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த 2 நாள்களாக ஓய்வில் இருந்து வந்தாா்.
மருத்துவர்களின் ஆலோசனைப்படி அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நிலையில், நேற்று காய்ச்சல் பாதிப்பு அதிகரித்ததால் ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோடு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
அங்கு மருத்துவர்கள் அவரது உடல்நிலையைப் பரிசோதனை செய்து தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர். தற்போது அமைச்சரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தென் சென்னை திமுக மாவட்ட செயலாளராக இருக்கும் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயராகச் சிறப்பாகச் செயல்பட்டவர். தற்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வரும் மா.சுப்பிரமணியன், தனது துறையின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனையின் தரத்தை பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்.
உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தினமும் உடற்பயிற்சி, நடைபயிற்சிகளை மேற்கொண்டு வருபவர் அமைச்சர் மா.சுப்பிரமணியன். நூற்றுக்கணக்கான மாரத்தான் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். உடலைப் பேணிக் காப்பதில் இளைஞர்களுக்கு ரோல் மாடலாக இருப்பவர் மா.சுப்பிரமணியன். அவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருக்கும் துரைமுருகன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வீட்டில் கீழே விழுந்ததன் காரணமாக காலில் காயம் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக அண்மையில் நடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
முக்குலத்தோர் வாக்குகள்.. 6 மாவட்டங்களில் திமுகவின் மைக்ரோ பிளான்.. ஓபிஎஸ் மூலமாக அதிமுகவுக்கு செக்! -
200+ உறுதி.. சிதறிய எதிர்க்கட்சிகள்... ஜாலியாக 'ஸ்வீப்' செய்யும் திமுக? பாலி மார்க்கெட் பரபர கணிப்பு -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
கள்ள நோட்டு கும்பல் கைது.. களத்தூரில் குடிசைகள் தீ வைப்பு.. காமராஜரின் 10 ஆண்டுகால ஆட்சி! -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
பிரேமலதா குடும்பத்திற்கு ஸ்டாலின் தரும் இன்னொரு சர்ப்ரைஸ்! பிரபாகரன் போட்டியிடும் தொகுதி -EXCLUSIVE -
“பைத்தியக்காரத்தனம்”.. திமுக சட்ட எரிப்பைக் கிண்டல் செய்த பெரியார்? கெடு விதித்த அண்ணா! -
திமுகவுக்கு எதிராக மதுரையில் பிரம்மாண்ட அஸ்திரம்.. அதிமுக எடுத்த பெரிய முடிவு -
என்டிஏவுக்கு தமிழ்நாடே 'நோ'.. நான் இருக்கும் வரை பாஜகவுக்கும் நோ எண்ட்ரி.. அதிர விட்ட மு.க.ஸ்டாலின்! -
புதுசு புதுசா யாரை கூட்டிட்டு வந்தாலும் தமிழ்நாடு பாஜகவுக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான்.. ஸ்டாலின் -
அப்போ நான் கைக் குழந்தையா இருந்தப்போ.. இதே திருச்சியில் தான்! பழைய நினைவுகளை பகிர்ந்த ஸ்டாலின்! -
க்ளோஸ்.. சுள்ளென சுட்டெரிக்கும் உதயசூரியன்.. சூடான தேர்தல் களம்! அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த திமுக!












Click it and Unblock the Notifications