கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு.. தமிழகத்தில் 3 நாட்கள் தடுப்பூசி பணிகள் நிறுத்தம்.. ராதாகிருஷ்ணன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ஜூன் 3 முதல் 6-ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்படும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் ஜூன் 7ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகே மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு மெல்ல குறைந்து வருகிறது. ஆனாலும் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை.

கொரோனா தடுப்பூசி பணிகள்

கொரோனா தடுப்பூசி பணிகள்

அதேபோல தடுப்பூசி பணிகளையும் வேகப்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தற்போது மக்களும் அச்சமின்றி அதிகளவில் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், பற்றாக்குறை காரணமாக ஜூன் 3 முதல் 6-ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி பணிகள் நிறுத்தப்படும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி ஒதுக்கீடு

தடுப்பூசி ஒதுக்கீடு

இது தொடர்பாகச் சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த மாதம் தமிழகத்திற்கு 2 மடங்கிற்கு மேல் தடுப்பூசி டோஸ்களை ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஜூன் மாதம் 42.58 லட்சம் தடுப்பூசி டோஸ் ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. மே மாதத்திற்கான 1.74 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டியுள்ளது. தமிழகத்தில் தற்போது 5 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது.

2 நாட்களுக்கு தேவையான தடுப்பூசி

2 நாட்களுக்கு தேவையான தடுப்பூசி

இதை வைத்துக் கொண்டு 2 நாட்கள் மட்டுமே தடுப்பூசி பணிகளை மேற்கொள்ள முடியும். கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய பணம் செலுத்திய பிறகும், தடுப்பூசிகளை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பற்றாக்குறை காரணமாக மாநிலத்தில் தடுப்பூசி போடும் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு அடுத்து 2 நாட்களுக்கு தமிழகத்திற்கு தடுப்பூசியை ஒதுக்கீடு செய்யதால் மட்டுமே தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெறும்.

தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்

தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்

ஜூன் மாதத்துக்கான முதல் தவணை தடுப்பூசி டோஸ் 6ஆம் தேதி தான் வரும் என்பதால் ஜூன் 3 முதல் 6-ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்படும்" என்று மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+