சென்னை பெருங்குடி ஹாஸ்டலில் குளித்த 29 வயது பெண்.. மறைந்திருந்த இளைஞருக்கு மறக்க முடியாத சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பெருங்குடி 184 வது வார்டில் சுகாதார துறையில் வீடுகள் தோறும் கொசு மருந்து அடிக்கும் பணியில் சரவணன் (வயது 30) என்பவர் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் கந்தன்சாவடி பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் கேரளாவை சேர்ந்த 29 வயது இளம்பெண் அவரது விடுதியில் குளிக்கும்போது கொசு மருந்து அடிக்க விடுதிக்கு சென்ற சரவணன் இளம்பெண் குளிப்பதை எட்டி பார்த்து அதை அவரது செல்போனில் வீடியோ எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Health worker

சென்னை பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட 184-வது வார்டில், வீடுகள் தோறும் கொசு மருந்து அடிக்கும் பணியில் சரவணன் (30) என்பவர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, இவர் கந்தன்சாவடி பகுதியில் உள்ள ஒரு விடுதிக்கு கொசு மருந்து அடிப்பதற்காகச் சென்றுள்ளார்.

அந்த விடுதியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 29 வயது இளம்பெண் ஒருவர் தங்கி, தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று அந்த இளம்பெண் தனது அறையில் உள்ள குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு கொசு மருந்து அடிக்க வந்த சரவணன், யாரும் எதிர்பாராத நேரத்தில் குளியலறை ஜன்னல் வழியாக அந்த இளம்பெண் குளிப்பதை எட்டிப் பார்த்துள்ளார். அதுமட்டுமின்றி, தனது செல்போனைப் பயன்படுத்தி அதனை வீடியோ எடுக்கவும் முயற்சி செய்துள்ளார்.

குளியலறை ஜன்னல் அருகே செல்போன் நீட்டப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், பயத்தில் கூச்சலிட்டுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு விடுதியில் இருந்த மற்ற பெண்களும், அக்கம் பக்கத்தினரும் உடனடியாக அங்கு ஓடி வந்தனர். தப்பிக்க முயன்ற சரவணனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் இது குறித்து துரைப்பாக்கம் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சரவணனைப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட இளம்பெண் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், முதலில் புகார் அளிக்கத் தயங்கியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், பொதுமக்களின் ஒத்துழைப்புடன் போலீசார் உரிய விசாரணை நடத்தி, சரவணன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

விசாரணையில் அவர் செய்த குற்றம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அரசுப் பணியில் இருக்கும் ஒருவரே இது போன்ற கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ள இத்தகைய சூழலில், இது போன்ற நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. இந்தச் சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+