சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில்.. இன்று நல்ல மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் ரிப்போர்ட்
சென்னை: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கோடை காலமாக இருந்தாலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. டவ்தே புயல் காரணமாக கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் மாவட்டங்களில் மழை பெய்து வந்தது.
கரும்பூஞ்சைக்கும் சின்க் மாத்திரைக்கும் தொடர்பா? சந்தேகம் எழுப்பும் வல்லுனர்கள்.. விசாரிக்க கோரிக்கை
முக்கியமாக குமரி, கொங்கு மாவட்டங்களில் கடந்த வாரம் நல்ல கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் யாஸ் புயல் காரணமாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை
அதோடு இன்று வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். வெப்பசலனம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும். லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி
அதேபோல் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். கன்னியாகுமரியில் ஏற்கனவே அதிகாலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. குமரி கேரளாவை ஒட்டி உள்ள கிராமங்களில் எல்லாம் கனமழை பெய்து வருகிறது.
குமரி
யாஸ் புயலை முன்னிட்டு உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இந்த மழை பெய்து வருகிறது. கடலூரில் நேற்று இரவில் இருந்தே மழை பெய்து வருகிறது. அதேபோல் புதுவை, சிதம்பரம், சீர்காழியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
டெல்டா
டெல்டா மாவட்டங்களில் இன்று வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யலாம். திருவாரூர், தஞ்சை, பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்களில் யாஸ் புயலை முன்னிட்டு உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.