ஆஹா.. திரும்பவும் ஆரம்பிச்சிருச்சு.. சென்னையில் பல இடங்களில் பலத்த மழை.. மக்கள் அவதி
Recommended Video
சென்னை: சிறிய மழைக்கே சின்னாபின்னமாகிவிடும் சென்னையை கடந்த மூன்று நாட்களாக ஈரம் காயாமல் வைத்திருக்கிறது பெருமழை. விட்டுவிட்டு பெய்த வரும் இந்த மழை தற்போது சென்னையின் பல்வேறு இடங்களில் பெய்து வருகிறது.
மற்ற ஊர்களுக்கு எல்லாம் மழை இல்லாமல் போனால் தான் கண்டம். ஆனால் சென்னைக்கு அதிக மழை பெய்தாலும் கண்டம். பெய்யாமல் போனாலும் கண்டம் தான்.

மற்ற ஊர்களை காட்டிலும் பளிச்சென சென்னை சாலைகள் காணப்பட்டாலும் சிறிய மழைக்கே குளமாக மாறிவிடும். இந்த சூழ்நிலையில் சென்னையில் கடந்த மூன்று நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.
இன்று காலை மழை பெய்த நிலையில் தற்போது மாலையிலும் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. தியாகராய நகர், கோடம்பாக்கம், வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல். சூளைமேடு, நுங்கம்பாக்கம்உள்பட சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
சாலைகளில் வெள்ள நீர் தேங்கி காணப்படுகிறது. மழை நீரில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications