வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியால் ராமநாதபுரத்தில் கனமழை... சூறாவளி வீசும் - வானிலை மையம்
குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் ராமநாதபுரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Recommended Video

வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் மாதம் முதல் பெய்து வருகிறது. நிவர், புரேவி புயல்களால் கனமழை கொட்டித்தீர்த்துள்ளது. ஆறுகளில் வெள்ளம் பெருகியுள்ளது. அணைகள் நிரம்பி வருகின்றன.
கடந்த சில நாட்களாக மீண்டும் மழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குமரிக் கடல் பகுதியில் வளிமண்டலத்தில் ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

தென் மாவட்டங்களில் மழை
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், தெற்கு உள் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையும், ஏனைய வட மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும்.

கடலோர மாவட்டங்களில் மழை
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், தெற்கு உள் மாவட்டங்களில் லேசான மழையும், வட மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும்.

வெப்பநிலை
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும்.

பலத்த காற்று வீசும்
வடகிழக்கு திசையில் இருந்து பலத்த காற்று அடுத்த 3 நாட்களுக்கு குமரிக் கடல் பகுதிகளில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் குமரிக் கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நாகப்பட்டினத்தில் 13 செமீ மழை
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 13 செமீ மழை பதிவாகியுள்ளது, திருத்துறைப்பூண்டி, பரங்கிப்பேட்டையில் தலா 7 செமீ , தலைஞாயிறு, வேதாரண்யம் , திருத்துறைப்பூண்டி தலா 6 செமீ, அய்யம்பேட்டை 5 செமீ, குடவாசல், காரைக்கால் , பாண்டவையர் ஹெட், புவனகிரி தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மன்னார்குடி,திருவாரூர், தரங்கம்பாடி, பாம்பன், ராமநாதபுரம், மதுக்கூர், வட்டானம், சிதம்பரம்,செந்துறை,திருவிடைமருதூர் ராமேஸ்வரம், கிராண்ட் அணைக்கட்டு, நன்னிலம், கொள்ளிடம், புள்ளம்பாடி, மண்டபம், சீர்காழி பகுதிகளில் தலா 3 செ.மீ.












Click it and Unblock the Notifications