தமிழ்நாட்டில் நீடிக்கும் கனமழை.. பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Subscribe to Oneindia Tamil

சென்னை; தமிழ்நாடு முழுக்க கனமழை பெய்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

Recommended Video

    Chennai-ல் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை மையம்

    தமிழ்நாட்டில் மீண்டும் தீவிர கனமழை அதிகரித்து உள்ளது. நேற்று இரவில் இருந்து டெல்டா மாவட்டங்கள் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை விடாமல் பெய்து வருகிறது.

    இன்று புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது. இதனால் மழை மேலும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு இதனால் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் சாலை முழுக்க வெள்ளம் ஏற்பட்டு பல பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன. அதேபோல் காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களிலும் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

    Heavy rain in Tamilnadu: Leave announced for many schools and colleges in the state

    சென்னையில் கனமழையால் ஏற்கனவே பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் திறக்கப்பட்டன. அதேபோல் சேலம் மாவட்ட சுற்றுவட்டாரங்களில் பெய்த கனமழையால் இன்று மேட்டூர் அணையும் திறக்கப்பட்டது.

    கனமழை காரணமாக நேற்று தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில்தான் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    தொடர் மழை காரணமாக மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, விழுப்புரம் மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

    பல மாவட்டங்களில் மழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளதால் மேலும் சில மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+