ஆடிவரும் அரபிக் கடல் காத்து.. தமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: தென்மேற்கு பருவ மழை கேரளாவில் தீவிரம் அடைந்துள்ள நிலையில, தமிழகத்தில் நீலகிரி, தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவ மழை கேரளாவில் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. கேரளாவின் திருவனந்தபுரம், எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு, கோட்டயம், உள்பட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திலும் கன்னியாகுமரிஉள்பட சில பகுதிகளில் பருவ மழை தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில், "லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடலில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி இருக்கிறது. இதேபோல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை நீடிக்கிறது. எனவே தென்மேற்கு பருவ மழை தீவிரமடைய வாய்ப்பு உருவாகி உள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை,தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. இது தவிர வெப்பச்சலனம் காரணமாகவும் இன்று தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேநேரம் மாநிலத்தின் 11 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்தே காணப்படும்" என கூறினார்கள்.
இதனிடையே தமிழகத்தின் கோவை, கன்னியாக்குமரி, நாகர்கோவில், மடத்துக்குளம், நாமக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனிடையே இன்று தமிழகத்தில் வெப்பநிலையை பார்த்தால், திருவள்ளூரில் 107 டிகிரி பாரன்ஹீட்டும், திருத்தணியில் 106 டிகிரி பாரன்ஹீட்டும், சென்னையில் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலையும், வேலூரில் 104 டிகிரி பாரன்ஹீட்டும் காணப்படுகிறது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications