தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பல நாட்கள் காலம் தாழ்ந்து தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கி இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மிகவும் அதிக அளவில் மழை பெய்து வருகிறது.
நேற்று காலையில் இருந்து டெல்டா பகுதிகள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. இதன் நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை இன்றிலிருந்து வலுப்பெறும். இதனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை அதிகளவில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
[கனமழை எதிரொலி.. தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை]
மேலும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளதால் மீனவர்கள் பாதுகாப்புடன் கடலுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
வானிலை ஆய்வு மையம் கூறியது போலவே தற்போது டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கில் கனமழை பெய்து வருகிறது. காரைக்கால், சிதம்பரம், சீர்காழியில் மிதமான மழை பெய்து வருகிறது.