கனமழை எதிரொலி.. தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கி இருக்கிறது. மிகுந்த காலம் தாழ்த்து நேற்றுதான் பருவமழை தொடங்கியது. நேற்று காலையில் இருந்தே இதனால் மழை பெய்து வருகிறது.

நேற்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மிகவும் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. டெல்டா பகுதிகள் மற்றும் கடலோர மாவட்டங்களில் நேற்று காலையில் இருந்து கடுமையான மழை பெய்து வருகிறது.
இங்கு பெய்த மோசமான மழை காரணமாக பல இடங்களில் சிறிய அளவில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது.
மேலும் தமிழ்நாட்டில் இன்னும் 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது.
[தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை!]
இந்த மழையின் காரணமாக டெல்டா பகுதிகள் அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது. இன்று காலையில் இருந்து டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் மழை பெய்தது.
இதையடுத்து கனமழை காரணமாக புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications