உள் தமிழகத்தில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்யும்.. சென்னை வானிலை மையம் தகவல்!
Recommended Video
சென்னை: உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் தலைக்காட்ட முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. கூடவே அனல்காற்றும் வீசுவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.
ஃபனி புயலுக்கு பிறகு சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டுவந்தது. மேகமூட்டமாக இருந்தபோதும் புழுக்கம் குறையாமல் இருந்துவந்தது.

கொளுத்தும் வெயில்
இந்நிலையில் இன்று வெயில் கொளுத்தி வருகிறது. கொளுத்தும் வெயிலால் சாலைகளில் மக்களின் கூட்டம் வழக்கத்தை விட மிகக்குறைவாகவே உள்ளது.

100 டிகிரி பாரன்ஹீட்
இதனிடையே சென்னையில் வெப்பம் இன்று அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் சுட்டெரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கனமழை கொட்டும்
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் இன்று வெப்பம் அதிகமாக பதிவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட 14 உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று
உள் மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் பிளவக்கல்லில் 4 சென்டிமீட்டரும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆகிய இடங்களில் தலா 3 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
-
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications