தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை : நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மதுரை மாவட்டம் கள்ளந்திரியில் அதிகபட்சமாக 12 செமீ மழையும், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் 7 செமீ மழையும் பதிவாகியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, நீலகிரி மாவட்டம் உதகமண்டலம், இராணிப்பேட்டை மாவட்டம் கலவாய் AWS ஆகிய இடங்களில் தலா 6 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
ஆவடி, ஆலங்காயம், வந்தவாசி, கோவில்பட்டி, சின்னக்கல்லார், திருத்தணி PTO , பார்வூட் ஆகிய பகுதிகளில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது. ஊத்துக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, வால்பாறை தாலுகா அலுவலகம், சோளிங்கர், வாணியம்பாடி, திருப்பத்தூர் PTO, சின்கோனா, கேத்தாண்டப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 4 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
பேரையூர், வாத்தலை அணைகட்டு, தேவாலா, காட்பாடி, செய்யாறு, நாட்ரம்பள்ளி, மணப்பாறை, வால்பாறை PTO, ஆர்.கே.பேட்டை, கிருஷ்ணகிரி, விரிஞ்சிபுரம் KVK, காவேரிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.
தாமரைப்பாக்கம், அவலாஞ்சி, மதுராந்தகம், பாரூர், மேட்டுப்பட்டி, செம்பரம்பாக்கம், வடபுதுப்பட்டு, தர்மபுரி PTO , திருச்சுழி, சோலையாறு ஸ்ரீபெரும்புதூர், கிளென்மார்கன், தம்மம்பட்டி, அம்பத்தூர், வாடிப்பட்டி, கோத்தகிரி, நடுவட்டம், கோவில்பட்டி ஆகிய இடங்களில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.

இடி மின்னலுடன் கனமழை
வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 21.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழை தொடரும்
22.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

மிதமான மழைக்கு வாய்ப்பு
வரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் லேசான மழை
சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்றும், நாளையும், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications