விடாது பெய்யும் மழை.. சென்னை, நாகை உட்பட 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
விடாது பெய்து வரும் மழை காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
Recommended Video

சென்னை: விடாது பெய்து வரும் மழை காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
தமிழகம் முழுக்க தற்போது தீவிரமாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் மீண்டும் வடகிழக்கு பருவமழை சூடுபிடித்துள்ளது. சென்னையில் அதிக அளவில் இதனால் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடைசி கட்டத்தில் அதை சரி செய்யும் வகையில் மீண்டும் மழை பெய்து வருகிறது.

நேற்று இரவில் இருந்து மீண்டும் மழை சூடுபிடிக்க உள்ளது. வானிலை மையத்தின் அறிவிப்பின்படி வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த மாறுபாடு காரணமாக இந்த மழை பெய்யும். இன்றும் நாளையும் மழை பெய்யும்.
இதனால் நேற்று சென்னை, ராமநாதபுரம், சேலம், குமரி, கொடைக்கானல், கோயம்புத்தூர், திருவாரூர், தஞ்சை, நீலகிரி, திருவள்ளூரில் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. சென்னையில் இரவு முழுக்க மழை பெய்தததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது.
இதனால் தற்போது 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, சிவகங்கை, நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இடைவிடாது பெய்யும் கனமழை காரணமாக விடுமுறை விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications