பியூட்டி புல் சென்னை... ஒன்டர் புல் சென்னை.. சென்னையில் பலத்த காற்றுடன் செம்ம மழை.. மக்கள் குஷி
Recommended Video
சென்னை: சென்னையில் இன்று மாலை திடீரென சூழ்ந்த கருமேகங்களால் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி வருகிறது. இந்த மழையால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று கூறியிருந்தது..

சொன்னது போலவே சென்னையை இன்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன. குளிர்ந்த காற்றுடன் மேகங்கள் சென்னை நகரை வட்ட மடித்துக்கொண்டே இருந்தன. போக்குகாட்டிவிட்டு ஏமாற்றி செல்லாமல் அப்படியே ஒரு காட்டு காட்டியுள்ளது மழை.
இதன் காரணமாக திடீர் மழையால் சென்னைவாசிகள் நெகிழ்ச்சி அடைந்தனர். சென்னையில் பலத்த காற்றுடன் விருகம்பாக்கம், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
இதேபோல் பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், தாம்பரம், பெரும்பாக்கம், சேத்துபட்டு, சேலையூர், திருவெற்றியூர் என தியாகராய நகர், வேளச்சேரி உள்பட சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது
அண்மைக் காலமாக சென்னையில் பரவலாக மழை பெய்து வருவதால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது.
சென்னையில் பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பணி முடிந்து வீடு திரும்புபவர்கள் சிரமத்தை சந்தித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications