வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று முதல் 13-ந் தேதி வரை ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும்.

Heavy to very heavy rain expected over 5 districts in TN

மேலும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பிற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும்.

சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தென்மேற்கு வங்க கடல், குமரி கடல், தென்கிழக்கு அரபிக் கடலில் பலத்த காற்று வீசுவதால் இன்று முதல் 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+