ஸ்தம்பித்த சென்னை.. விடுமுறை முடிந்து வரும் மக்களால் கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னை: பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை வழங்கப்பட்டது. இதையடுத்து ஏராளமானவர்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்றனர். நாளை மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதையடுத்து பொதுமக்கள் வாகனங்களில் சென்னை திரும்பி வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்த நிலையில் 12 நாள் விடுமுறை வழங்கப்பட்டது. டிசம்பர் 24ம் தேதியில் தொடங்கிய விடுமுறை இன்று வரை இருந்தது. மேலும் இந்த விடுமுறையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகள் வந்தன.

இதனால் வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு குழந்தைகளுடன் வந்தனர். இதற்கிடையே தான் அரையாண்டு தேர்வு விடுமுறை இன்றுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து நாளை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.
இதனால் வெளியூர்களில் உள்ள மக்கள் மீண்டும் சென்னை திரும்பி வருகின்றனர். இந்நிலையில் தான் சென்னை செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுது. உளுந்தூர் பேட்டை சுங்கச்சாவடி முதல் சென்னை வரை பல இடங்களில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் உளுந்தூர் பேட்டை சுங்கச்சாவடி, சிங்கம்பெருமாள் கோவில் சாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். இருப்பினும் இந்த போக்குவரத்து நெரிசல் என்பது பிற பண்டிகை காலங்களை ஒப்பிடும்போது கொஞ்சம் குறைவாக தான் உள்ளது.
தீபாவளி, பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும்போது கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். அதனை ஒப்பிடும்போது இன்று போக்குவரத்து நெரிசல் கொஞ்சம் குறைவு தான். இது வாகன ஓட்டிகளுக்கு ஓரளவு நிம்மதியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு நிபந்தனைகள் தளர்வு! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
மண்டைக்கேறிய போதை.. ரம்யாவின் படுக்கையறையில் புகுந்த சென்னை போலீஸ்காரர்.. மறு நொடியே பிக் ட்விஸ்ட் -
“அரசு எங்களை ஏமாத்திருச்சு..” தேர்தல் நேரத்தில் போராட்டத்தை கையில் எடுக்கும் டாஸ்மாக் பணியாளர்கள்! -
சென்னை மக்களே 'கரண்ட் பில்' இன்னும் கட்டவில்லையா.. மின்சார வாரியம் மிக முக்கிய அறிவிப்பு -
சென்னை ரிசார்ட்டில் பல் மருத்துவர் செய்த காரியம்.. ₹11 லட்சத்துக்காக பவர் பத்திரத்தில் ஆடிய ஆட்டம்! -
காது மடல் ஓட்டைகளுக்கு ஆபரேஷன்! சென்னை நட்சத்திர ஹோட்டலில் தங்கிய மும்பை இன்ஸ்டா பிரபலம் கைது! -
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம்












Click it and Unblock the Notifications