Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உக்ரைனிலிருந்து தமிழகம் திரும்பிய மாணவர்கள் படிப்பை தொடர உதவி.. பட்ஜெட்டில் அறிவித்த பிடிஆர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் உள்நாடு அல்லது வெளிநாட்டில் படிப்பை தொடர தேவையான உதவிகள் செய்யப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் அங்குள்ள இந்திய மாணவர்கள் படிப்பை கைவிட்டு இந்தியா திரும்பியுள்ளனர். இதில் தமிழக மாணவர்களும் அடங்குவர். இதில் பெரும்பாலானவர்கள் அங்கு மருத்துவ படிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

உக்ரைனில் தற்போது அங்கு போர் முடியும் சூழல் இல்லாததால் மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் தான் உக்ரைனில் மீட்கப்பட்ட மாணவர்கள் உள்நாடு, வெளிநாட்டில் மருத்துவம் படிக்க உதவி செய்யப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

முதல்வர் வலியுறுத்தல்

முதல்வர் வலியுறுத்தல்

தற்போது உக்ரைனில் நடைபெற்று வரும் போரினால் பாதிக்கப்பட்டு மருத்துவக்கல்வியை தொடர இயலாமல் நமது மாணவ-மாணவிகள் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவக்கல்வியை தொடருவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தி உள்ளார்.

தமிழக அரசு உதவி

தமிழக அரசு உதவி

இந்த மாணவர்கள் நமது நாட்டில் அல்லது பிற வெளிநாடுகளில் மருத்துவக்கல்வியை தொடர்வதற்கான வழிமுறைகள் மத்திய அரசால் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்த வழிமுறைகளின் அடிப்படையில் அவர்களது எதிர்கால மருத்துவக்கல்விக்கான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

மருத்துவமனைகள் தரம் உயர்வு

மருத்துவமனைகள் தரம் உயர்வு

இதுதவிர தரமான மருத்துவ வசதிகளை மாவட்ட அளவில் வழங்குவதற்கு முக்கிய திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தவும் 19 அரசு மருத்துவமனைகளை புதிய மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக மேம்படுத்திடவும் அரசு முடிவு செய்துள்ளது. புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்கள் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் ரூ.1091 கோடி செலவில் மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்பட உள்ளது.

உயர்நிலை அமைப்பு

உயர்நிலை அமைப்பு

ஆய்வின்படி மனஅழுத்தம், பதற்றம், மனச்சிதைவு ஆகியவற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் மனநல மருத்துவ பயிற்சி பெற்ற மனித வளத்துடன் மனநோய் சிகிச்சை கட்டமைப்பை வலுப்படுத்துவது இன்றியமையாதது. இதனால் சென்னை கீழ்பாக்கத்திள்ள மனநல மருத்துவமனை தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் என்ற உயர்நிலை அமைப்பாக மேம்படுத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு முதற்கட்டமாக ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை ஆராய்ச்சி நிலையம் 750 படுக்கை வசதிகளுடைய தன்னாட்சி அதிகாரம் பெற்ற உயர்தர மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும்.

Recommended Video

    #BREAKING தமிழக பட்ஜெட் 2022-23: அரசுப்பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை!
    தரம் உயர்வு

    தரம் உயர்வு

    இப்பணிகள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் உலக வங்கி, தேசிய சுகாதார இயக்க நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும். தேசிய ஊரக சுகாதார இயக்க திட்டத்துக்கு ரூ.1906 கோடி, அவசர ஊர்தி சேவைகளுக்கு ரூ.304 கோடி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்துக்கு ரூ.817 கோடி, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்துக்கு ரூ.1547 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என கூறினார். மேலும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு மட்டும் ரூ.17,901.73 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையில் கூறினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+