கஜாவால் கலங்கி நிற்கும் மக்களுக்கு தண்ணீர் தானம் தரும் நல்ல மனிதர்- வைரலாகும் வீடியோ
சென்னை: கஜாவால் கலங்கி நிற்கும் மக்களுக்கு ஒருவர் தனது வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியை கொண்டு தண்ணீர் வழங்கி வரும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
கஜா புயல் கரையை கடந்த போது தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன.

இந்நிலையில் வீடு முழுவதும் மழை நீர் தேங்கியுள்ளதால் மக்கள் உணவுக்கும், குடிநீருக்கும் அல்லல்படும் சம்பவம் நடைபெற்று வருகிறது. சிலர் அரசை கண்டித்து சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வெள்ளம் பாதித்த ஒரு பகுதியில் குடிநீர் இல்லாமல் மக்கள் அல்லாடுவதை பார்த்து சத்யா நகரில் உள்ள தேவாலயத்தில் ஜெனரேட்டல் மூல்ம மோட்டார் இயக்கப்படுகிறது. ஆனால் எதை கொண்டு தண்ணீர் கொண்டு வருவது என்ற கேள்வியும் எழுந்தது.
தன்னுடைய வீட்டில் இருந்த நீர் தொட்டியை கொண்டு வந்து மக்களுக்கு குடிநீர் தரும் ஆரோக்கியசாமி pic.twitter.com/JwlkNAG20K
— ரமேஷ்முருகேசன் (@rameshibn) November 18, 2018
இதனால் அப்பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி தனது வீட்டிலிருந்த சின்டேக்ஸ் டேங்கை கொண்டு வந்து தேவாலயத்தில் தண்ணீர் பிடித்து கொண்டு ஊர் மக்களுக்கு வழங்கி வருகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications